மலேசியாவில் அண்ணா நினவு தினம் ….
நேற்று அண்ணா நினைவுநாள், தமிழகம் தவிர உலகெல்லாம் நினைவு கூர்ந்தார்கள். 1965ல் அண்ணா மலேசியா வந்து உரையாற்றியதை எல்லாம் மலேசிய வானொலி ஒளிபரப்பியது
“எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றார்கள், மலேசியாவிலே வாழுகின்றார்கள்..” என்ற தன் கரகரத்த குரலில் அண்ணாவின் குரலை கேட்டபொழுது உள்ளம் சிலிர்த்தது
உண்மையில் அம்மனிதனின் பேச்சு பெரும் அறிஞனின் பேச்சை போலவே இருக்கின்றது, எதுகை மோனை வார்த்தைகள் எல்லாம் தாவி வந்து அவர் பேச்சில் அமைகின்றன.
அவரை பேரறிஞர் என சொன்னதில் ஆச்சரியமில்லை.
சென்னைக்கு வந்த பொழுது தள்ளி இருந்து அண்ணா சமாதியினை நோக்கினேன், கலைஞர் எது செய்தாலும் அதில் ஒரு நிறைவும் அழகும் இருக்கும். அண்ணா சமாதியும் அப்படியே
மிக மிக அழகான நினைவாலயத்தை கலைஞர் எழுப்பி இருந்தார், பார்த்தவுடன் இனம்புரியா சோகம் மனதை நிரப்பும் அமைப்பு அது. அதுவும் கருப்புசட்டையினை நினையூட்டும் கருப்பு சலவை கல், கடமை கண்ணியம் கட்ட்டுபாட்டு என்பதை சொல்லும் அந்த தூண், திரும்பும் இடங்களில் உதய சூரிய அடையாளம் என அட்டகாசமாக அமைத்திருந்தார் கலைஞர்
அதன் அருகில் ராமசந்திரன் கல்லறை இருந்தது. சில கிறிஸ்தவ ஆலயங்களில் தேவமாதா, வானதூதர் காலடியில் சாத்தான் இருப்பதாக சிலைகள் இருக்கும். தெய்வங்களை பார்க்கும்பொழுது சாத்தானையும் பார்த்து தீரவேண்டும்
அப்படி அந்த கல்லறையும் இருந்தது
சொந்த அறிவே இல்லாத அதிமுகவினர் அப்பொழுதும் இருந்திருக்கின்றனர், அண்ணா சமாதியினை காப்பியடித்து அதனை அமைத்திருக்கின்றனர், அட பதர்களா? தூணையுமா காப்பி அடிக்க வேண்டும்
ஆனால் அதனை வடிவமைத்தவன் சாதாரண ஆளாக இருக்க முடியாது, மிக பெரும் குசும்பனாகவும் குதர்க்க வாதியாகவும் இருக்க வேண்டும்
ஆம், நன்றாக பாருங்கள் கவித்து போட்ட வெங்காயம் போல அதன் வெளிவடிவம் இருக்கின்றது. வெள்ளை பெயின்ட் மட்டும் அடித்துவிட்டார்கள், வெங்காய கலரில் அடித்திருந்தால் பளிச்சென தெரியும்
என்ன சொல்ல வருகின்றார்கள்?
ராமசந்திரன் ஒரு வெங்காயம், உள்ளே ஒன்றுமே இல்லை. எவ்வளவு அர்த்தம் நிறைந்த வடிவமைப்பு அது,
இதனை பார்த்தபொழுதே அந்த டிசைனரை கட்டி பிடித்து வாழ்த்தவேண்டும் போலிருந்தது
ஆனால் இது தெரியாமல் அங்கே சென்று கிட்டதட்ட 30 வருடமாக வணங்கி வருகின்றது அதிமுக கோஷ்டி. அவர்கள் சிந்தனையும் அறிவும் அவ்வளவுதான் என்பதற்கு அந்த வெங்காய வடிவ கல்லறையே சாட்சி.
சில விஷயங்களில் கில்லாடியான ஜெயலலிதாவிற்கு அந்த வெங்காய வடிவம் நிச்சயம் தெரிந்திருக்கும், ராமசந்திரனை பற்றி முழுக்க தெரிந்ததால் அப்படியே விட்டுவிட்டாரோ என்னமோ?
