மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு
அந்த செய்தி விஸ்வரூபமாகின்றது
அதாகபட்டது, தமிழகத்தில் மணற்கொள்ளை உலகறிந்தது. எல்லா ஆறுகளும் சுரண்டபட்டாயிற்று, இனி சுரண்ட வழியே இல்லை
இனி மணல் வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகள் மண்டையினைத்தான் உடைக்க வேண்டும், அதுவும் களிமண் இருக்குமே தவிர, கட்டடம் கட்ட கூடிய மண் இருக்காது.
இந்நிலையில்தான் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய கட்டடம் கட்டுவோர் முடிவெடுத்தனர், முதற்கட்டமாக 50 ஆயிரம் டன் மணல் தூத்துகுடிக்கு வந்திருக்கின்றது
தமிழக மணல் விலையில் இது பாதி என்பது குறிப்பிடதக்கது
இதனால் வீட்டு வேலை உட்பட கட்டட செலவுகள் கணிசமாக நிச்சயம் குறையும்
ஆனால் மணல் வியாபாரிகள் விடுவார்களா? அவர்கள் பிழைப்பில் மண் விழ விடுவார்களா?
இந்த மலேசிய மணல் , மண் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பலர் கண்களில் மணலை தூவியிருக்கின்றது அவ்வளவுதான் அரசியல் விளையாட்டு ஆரம்பமாயிற்று
தூத்துகுடி துறைமுகத்தை விட்டு மணலை எடுக்க முடியவில்லை
இதிலிருந்து என்ன தெரிகின்றது?
பதவியில் இருக்கும் பல அமைச்சர்களுக்கு மணல் வியாபாரம் இருக்கின்றது, மலேசிய மண் அதனை கெடுப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பது தெரிகின்றது
மொத்தத்தில் மண்வாரி இறைத்துவிட்டு மண்ணாய் போங்கள் என சொல்லிவிட்டு கிளம்பவேண்டிய விஷயமிது