மலேசியாவில் தமிழனுக்கு அரசு பதவி, அமைச்சர் பதவி இருக்குண்ணே….

Image may contain: 2 people, people standing

தமிழன் உலகமெல்லாம் கொடிகட்டி பறக்குறாண்ணே நினைச்சா சந்தோஷமா இருக்கு

அப்படியா எங்கடா?

மலேசியாவில் தமிழனுக்கு அரசு பதவி, அமைச்சர் பதவி இருக்குண்ணே, சிங்கப்பூரில் பிரதமர் பதவி கொடுத்தாங்கணே.

அப்படியா வேற யாரெல்லாம்டா?

அண்ணே அமெரிக்காவில அமிர்தராஜ் பிரதர்ஸ்ல இருந்து இப்போ கூகிள் அதிகாரி சுந்தர்பிச்சை வரை தமிழர்ணே , மொரிஷியஸ், பிஜி, கயானா, ரியூனியன் ஐலண்ட், தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்னு உலகம் முழுக்க நம்ம தமிழன் பெரிய பதவில இருக்காண்ணே. இலங்கை எதிர்கட்சி தலைவர் கூட தமிழர்தான்

இந்தியாவில அப்படி தமிழன் ஒண்ணும் கிழிக்கலியா?

ஏன் இல்ல? இந்தியாவில் தமிழன் பெரும் சாதனை செஞ்சிருக்காண்ணே. டிவிஎஸ் யாரு? அவர் ஒரு தமிழர், அது தமிழன் கம்பெனி இந்தியா முழுக்க கொடிகட்டி பறக்குது

அப்படியா சந்தோஷம்டா

அண்ணே ஏவி தாம்சன் ஒரு தமிழர் அவருக்கு அசாமில் எவ்வளவு டி எஸ்டேட் தெரியுமா? ஹெச் சி எல் சிவநாடார் தமிழர், இன்னைக்கு இந்தியா முழுக்க இல்ல உலகம் முழுக்க கொடிகட்டி பறக்குறார்ணே, மும்பை, பெங்களூர், டெல்லின்னு இந்தியாவில் எல்லா இடத்திலும் தமிழன் பெரிய அளவுல இருக்காண்ணே , எவ்வளவு பெருமை

அரசியல்ல யாரும் இல்லியா?

அண்ணே இந்த தேசம் காந்திக்கு அப்புறம் வணங்கும் காமராஜர்ல இருந்து நிறையபேர் இந்திய அரசியல்ல உண்டுண்ணே, காத கொண்டாங்க ரகசியம் சொல்றேன் பெங்களூர் மேயர் கூட தமிழர்ணே

இந்த விஞ்ஞானம்?

எண்ண்ணே இப்படி கேட்டுட்டீங்க, ராமானுஜம்ல இருந்து அப்துல் கலாம், ஆர்.சிதம்பரம், மயில்சாமி அண்ணாதுரை, ரவி அருணன்னு எத்தனை பேர் டெல்லில கொண்டாடபடுறாங்க தெரியுமா?

இந்த ராணுவம்

அண்ணே பாகிஸ்தான் காஜி மூழ்கடித்த‌ கிருஷ்ணன் ஜியி, ஜெனரல் சுந்தர்ஜியில் இருந்து அட்மிரல் பத்மநாபன் வரைக்கும் எவ்வளவோ பேர்

விளையாட்டு?

அண்ணே கிரிக்கெட்டுல பாதிபய நம்ம பயதான்.

சரிடா. நீங்கெல்லாம் உலகமெல்லாம் போணும் முன்னேறனும், அங்கெல்லாம் உங்கள பிரதமர், அமைச்சர், தொழிலதிபர்னு உக்கார வைக்கணும்

கண்டிப்பாண்ணே

இந்தியாவிலும் எங்க போனாலும் உங்கள வாழவிடனும், விளையாட விடனும், வசதியா வாழவைக்க்கணும்

கண்டிப்பாண்ணே, இது நம்ம நாடு தமிழன் எங்க போனாலும் அவனுக்கு இடம் கொடுத்து ஆகணும்

அப்போ இந்த ரஜினி??

அண்ணே விளையாடாதீங்க அவர் ஒரு வந்தேறி கன்னடன் பார்ப்பன வெறியன்

நாய உன்ன இன்னைக்கி கொல்லாம விடமாட்டேன் நில்லுடா டேய்..”
..