மலேசியாவில் மே 9 2018 பொதுதேர்தல்

மலேசியாவில் நாளை பொதுதேர்தல், இதனால் பொதுவிடுமுறை அறிவித்தாகிவிட்டது

நம்மை விட 10 வருடம் கழித்து சுதந்திரம் வாங்கினார்கள், 14ம் பொதுதேர்தல் வருகின்றது

ஆளும் கூட்டணிதான் கடந்த 60 வருடமாக இங்கு ஆட்சியில் இருக்கின்றது, அது இன்னும் தொடரலாம்

சீரான வளர்ச்சி, ஏழை பணக்காரன் இடைவெளி பெரிதாக இன்மை, எல்லோரும் எல்லா வசதிகளையும் அனுபவித்து வாழ வசதி என பல விஷயங்கள் இருப்பதால் பெரும் அதிருப்தி என ஒன்றுமில்லை

அரசு அதன் கடமையினை சரிவர செய்வதால் மக்களுக்கு பெரும் குறை என எதுவுமில்லை, யாவரும் நலம்

அதிசயித்து பார்க்கும் விஷயம் உண்டென்றால் உலகில் எந்த நாட்டிலும், குறிப்பாக எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லா மத சமத்துவம் இங்கு இருக்கின்றது. சகோதரத்துவம் இருக்கின்றது

மலேசியர்களின் உயர்ந்த மனம் வாழ்த்துகுரியது, நாளும் மும்மாரி கொட்டுகின்றதென்றால் அந்த மனிதர்களின் நல் மனதிற்காக‌

உள்நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என விடுமுறை, காரணம் பல இடங்களில் வேலை செய்பவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக செய்திருகின்றார்கள்

சுவரொட்டி இல்லை, மைக்கை பிடித்து கத்தும் காட்டு கத்தல் இல்லை, பெரும் ஊர்வல கொடுமை இல்லை, நாடகம் இல்லை

தேர்தலும் அதன் பிரச்சாரமும் மக்களின் இயல்பு நிலையினை கொஞ்சமும் பாதிக்காது, அற்புதமான நடைமுறை

குறிப்பாக வதந்திகள், பொறுப்பற்ற பேச்சுக்களை வளரவிட அனுமதிப்பதில்லை இது நாட்டின் அமைதியினை நிலை நிறுத்துகின்றது

சரி அவர்கள் வாக்களிக்க வேண்டும் அவர்களுக்கு விடுமுறை, நமக்கு ஏன் விடுமுறை?

இதுதான் மலேசியர்களின் பெருந்தன்மை, நம்மையும் வீட்டில் இரு என சொல்லிவிட்டார்கள்

நல்லவர்கள் மனதிற்கு எல்லாம் நல்லதாய் அமையட்டும்

நாளை என் மன மகிழ்ச்சிக்காக, இன்றே எவனோ ஒரு நல்லவன் மீன்பிடிக்க கிளம்பி இருப்பான். அந்த கடவுளின் தூதனுக்கு நன்றி