மலேசிய டிவியில் ஒரு காட்சி மாறி மாறிவருகின்றது
மலேசிய டிவியில் ஒரு காட்சி மாறி மாறிவருகின்றது
அதாவது நடிகர் சங்கம் இங்கு ஜனவரி 6ம் தேதி ஏதோ விழா நடத்துமாம், கல்லா கட்டுமாம் கட்டட்டும்
அதற்கு டிரைலர் ஓடுகின்றது, அதில் இந்த ராதாரவி என்பவர் இப்படி பேசுகின்றார் “தமிழ் நடிகர்கள் வளமாக இருக்க ஒரே காரணம் மலேசிய ரசிகர்கள்தானே தவிர, வேறு யாரும் அல்ல”
கேட்டீர்களா?
மானமுள்ள தமிழ்நாட்டு தமிழன், கொஞ்சமேனும் உணர்வுள்ள தமிழன் அங்கிருந்தால் செய்யவேண்டியதை செய்யட்டும்
வடிகட்டிய பொய் என்பதை விட, தமிழ்நாட்டு தமிழன் எல்லாம் சினிமா ரசிகன் எல்லாம் …..கு சமானம் என்ற தொனி இது
மலேசியாவில் தமிழ்படம் வருவது குறைவு , வந்தாலும் 4 நாள் மட்டுமே ஓடும். அதிகபட்சம் பாகுபலி மட்டும் 20 நாள் ஓடியது
தமிழக நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை
நடிகர்கள் திரையில் நடிக்கலாம், ஆனால் காசுக்காக இப்படி எல்லாம் நன்றிகெட்டு பேசுவது பன்றிக்கு சமம்
10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைவாசிகள் விடுதலை அறிவிப்பு , தமிழக முதல்வருக்கு சீமான் நன்றி
நன்றியா? அவர்களை விடுவித்து சிறையில் இடம் இருப்பதை உறுதி செய்வது எதற்காக? உம்மையும் உமது தும்பிகளையும் உள்ளே பிடித்து போடுவதற்காக அய்யா
அது தெரியாமல் இவர் நன்றி தெரிவிக்கின்றாராம் , ரொம்ப அப்பாவி அங்கிள் போலிருக்கின்றது