மலையகத்திற்கு மோடி சென்றதில் வேல்முருகனுக்கு என்ன கோபம்?

தமிழர்களின் பிரச்னை குறித்து மோடி ஒருவரிகூட பேசவில்லை’ – வேல்முருகன்

மோடி சென்றது இலங்கை மலையகத்திற்கு, அங்கு மருத்துவமனை கொடுத்திருக்கின்றார், 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கொடுத்திருக்கின்றது, இன்னும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளது

இதற்கு மேலும் மோடி என்ன செய்யவேண்டும் என இவர் எதிர்பார்க்கின்றார்?? ஈழம் சென்று மோடி துப்பாக்கி தூக்கி பங்கரில் பதுங்க வேண்டுமா?

ஈழதமிழருக்கு உதவபோய் இந்தியா தன் கையினை சுட்டுவிட்டு ஒதுங்கிகொண்டது, இனி மலையக தமிழர்களையும் விட்டுவிட வேண்டும் என்கின்றாரா வேல்முருகன்??

முன்பு ராஜிவ் செய்த வடமராட்சி சம்பவத்தின் துணிச்சல் போன்றது இலங்கை மலையகத்தில் மோடி தலையிட்டிருப்பது என சிங்கள தரப்பு சாடுகின்றது, நிச்சயம் இது துணிவான விஷயமே

வடபகுதிக்கு மோடி செல்லவில்லை, மீணவர் பிரச்சினை பேசவில்லை என குற்றம்சாட்டுகின்றார் இவர், வடபகுதி மீணவன் தான் சிங்களனிடம் தமிழ் மீணவர்களை விரட்ட சொல்கின்றான் என்பது வேல்முருகனுக்கு மறந்துவிட்டது

மலையகத்திற்கு மோடி சென்றதில் இவருக்கென்ன கோபம்? அவர்கள் தமிழர்கள் இல்லையா?

போரினால் வீடிழந்த ஈழமக்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டி கொடுத்திருக்கின்றது, இப்பொழுது மலையக தமிழருக்கும் உதவியிருக்கின்றது, இதனை எல்லாம் மறைத்து சும்மா கத்திகொண்டிருக்கின்றார் வேல்முருகன்

செயலில் மோடி காட்டியபின் பேசுவதில் என்ன இருக்கின்றது? மோடி செய்தே காட்டிவிட்டார்.

முன்பு ராஜிவினை சிங்களன் ஒருவன் துப்பாக்கியால் தாக்கினான், அந்த துப்பாக்கியினை வாங்கி வந்து இவரை போன்றவர்கள் முதுகில் சாத்த வேண்டும்