மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : அமைச்சர்
மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ மாட்டு சாணம் தெளிக்கபடாத வீடுகளில்தான் டெங்கு கொசு வரும் என சொல்லியிருந்தது குறிப்பிடதக்கது
இவர்கள் இருவரும் இந்த பெரும் மருத்துவ கருத்தை சொன்ன இடம் எதுவென்றால் ” இந்திய அறிவியல் கண்காட்சி”
அட பாவிகளா? அந்த அம்மா அப்பல்லோ போனபின்பு ஒரு வருடமாகத்தானே உங்களுக்கு இந்த பாஜக சகவாசம்?
அதற்குள் ஏன் இப்படி முழு சாமியாராய் ஆகிவிட்டீர்கள்?
இனி எதற்கு உங்களுக்கு இரட்டை இலை, அதிமுக எல்லாம்? இனி தாமரை சின்னத்திலே அரசியல் செய்யுங்கள்
சொல்லியிருப்பது பார் பார்த்தீர்களா? உயர் கல்விதுறை அமைச்சர். ஆனால் கால்நடை அமைச்சர் போல பேசிகொண்டிருக்கின்றார்.
ஏன் அமைச்சரே? அந்த ஜெயலலிதாவிற்கு இம்மாதிரி மாட்டு மூத்திரமும், மாட்டுசாணமும் கொடுக்காமல் ஏன் அப்பல்லோவில் வைத்திருந்தீர்கள்???
கொஞ்சம் அச்சமாகவும் இருக்கின்றது, டெங்கு பரவிவரும் நிலையில் அரசு சார்பாக மாட்டு தொழுவம் திறக்கபட்டு அதில் மக்களை தங்கவைத்துவிடுவார்களோ?
செய்தாலும் செய்வார்கள் இவர்கள். ஒரு மாதிரித்தான் அலைகின்றார்கள்
ராமசந்திரனின் நூற்றாண்டுவிழாவில் “மாட்டுக்கார வேலன் ” மட்டும் அடிக்கடி பார்ப்பார்கள் போல