மாணவி அஸ்வினி கொலை தொடர்பாக பல்வேறு தகவல்கள்
மிக மிக சோகமான சம்பவம் என்றாலும், மாணவி அஸ்வினி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகின்றன
அஸ்விணிக்கும் அந்த அழகேசனுக்கும் பதிவு திருமணம் நடந்தது என்கின்றார்கள், பின் அஸ்வினி பிரிந்து சென்றுவிட்டார் அதனால் அழகேசன் கொன்றுவிட்டார் என்றும் சில தகவல்கள் வருகின்றன
மாணவியினை காதல் தகறாறில் குத்தி கொன்றான் அழகேசன் என்றும், மனைவியினை குத்தினான் கணவன் என்றும் குழப்பமான செய்திகள் வருகின்றன
இந்த ஊடகங்கள் ஆளுக்கொரு செய்தியாக சொல்லி குழப்புவது இப்படித்தான்
ஆனால் அஸ்வினிக்கும் அந்த அழகேசனுக்கும் காதல் இருந்து, அதன் பின் அவள் பிரிந்ததை மட்டும் சில ஊடகங்கள் சொன்னது
ஒரு ஆண் மனதில் ஆசையினை வளர்த்துவிட்டு அதை சட்டென பிடுங்கி எறிய சொன்னாதால் வந்த விளைவு இது
பொதுவாக பதின்மயதில் இருப்பவர்களுக்கு வரும் சிக்கல் ஏராளம், மேல்நாட்டில் அவற்றை எல்லாம் மிக எளிதாக கடந்து செல்ல பல ஆலோசனை மையம் முதல் ஏராளமான வசதிகள் இருப்பதால் இம்மாதிரி விஷயங்கள் நடப்பதில்லை
இந்த உலகில் அவனோ அவளோ ஒரே ஒருவர்தானா? வேறு யாரும் இல்லையா? என்பது போல் கடந்துவிடுவார்கள்
இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை. வித்தியாசமான மனநிலை கொண்ட சமூகம் இது. வருங்காலமாவது மாறட்டும்
காதலிப்பது தவறில்லை. ஆனால் இம்மாதிரி கொலையில் முடியும்பொழுதுதான் அது பெரும் சோகமாகின்றது
விருப்பமில்லை என்ற பெண்ணை விட்டுவிலகுவதுதான் சரியான வழு, அவளை கொல்லும் அளவிற்கு சென்றதெல்லாம் ஆணாதிக்கம். பெண் ஒரு சொத்து தனக்கான சொத்து என்பதுதான் அதற்கான ஒரே எண்ணம்
வருங்கால தலைமுறையாவது மாறட்டும்
இருவரும் பதின்ம வயதினர், இன்னும் கொஞ்ச காலம் சென்று இந்த காதலை நினைத்துபார்த்தால் அவர்களுக்கே சிரிப்பு வந்திருக்கும், வாழ்க்கை அவர்களுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்திருக்கும். இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது
இவ்விஷயத்தை ஆளாளுக்கு கண்டிக்கின்றார்கள், இதில் பன்னீர் செல்வமும் கண்டித்திருக்கின்றார், எப்படி?
இதற்கு கடும் தண்டனை வழங்கபட வேண்டும், குற்றவாளி தண்டிக்கபட வேண்டும் என முழங்கியிருக்கின்றார்
இவர் யாரென்றால் இவர்தான் துணை முதலமைச்சர், குற்றவாளிகளை விடமாட்டோம் என்றுதான் சொல்லியிருக்க வேண்டுமே தவிர, விட கூடாது என ஒரு துணைமுதலமைச்சர் சொல்ல கூடாது. அவர்கள்தானே தண்டிக்க வேண்டும்.
ஒருவேளை பன்னீருக்கு தான் துணைமுதலமைச்சர் என்பது மறந்தே விட்டதோ?