“மாணிக்ய மலராய பூவி” : மலப்பார் இஸ்லாமிய நாட்டுபுற பாடல்

Image may contain: 2 people, people smiling, selfie and close-up

அந்த பிரியா வாரியார் எந்த நேரத்தில் கண்ணடித்தாரோ கண் திருஷ்டி பட்டுவிட்டது

அவர் கண்ணடித்தது இல்லை சிக்கல், அந்த கண்ணடிக்கும் பொழுது பின்னால் பாடபட்ட பாடல்தான் சிக்கல்.ஆனால் இப்பெண்ணை முதல் குற்றவாளியாக இஸ்லாமிய சங்கங்கள் நாடெல்லாம் வழக்கு தொடுத்து அழிச்சாட்டியம் தொடங்கிவிட்டது, இயக்குநர் இரண்டாம் குற்றவாளியாம்

முகமது நபிக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அன்பை குறித்த பாடலாம் அது, இங்கு கொச்சைபடுத்திவிட்டதாய் வழக்கு

அந்த பாடல் “மாணிக்ய மலராய பூவி’ ஒன்றும் இப்பெண் எழுதியதல்ல, இந்த டைரக்டர் எழுதியதுமல்ல

உண்மையில் அதனை எழுதியது அக்கால மலப்பார் இஸ்லாமியர்கள்

அவர்களின் நாட்டுபுற பாடல் அது, அதனை 1980ல் ஆல்பமாக மாற்றியதும் இஸ்லாமியர்கள்

பின் அது கேரளா முழுக்க ஹிட் ஆனது , எல்லோரும் ரசித்தார்கள்

இப்பொழுது அந்த பாடலை இச்சினிமாவில் வைத்தது தவறு என இஸ்லாமிய சங்கங்கள் இந்த அபலை பெண் மீது வழக்கு தொடர்கின்றன‌

அவர்கள் பாடலை அவர்கள் மட்டும் பாடலாம் என நினைக்கின்றார்களோ என்னமோ?

என்ன இருந்தாலும் இந்துக்களின் சகிப்புதன்மையே இவ்விஷயத்தில் தனி

“பிள்ளையார் பட்டி ஹீரோப்பா நீ” என பிள்ளையாரை கலைக்கலாம், “அய்யனாவரம் அண்டாளூ” என வம்பிழுக்கலாம், காதல் பாடல் வரை கண்ணனை இழுக்கலாம், “கருமாரி காதலை சேர்த்து வைப்பா” என கும்மலாம், “மீனாட்சி மீனாட்சி” என்றேல்லாம் எழுதலாம்

எல்லா இந்து தெய்வங்களையும், புராண பெண்களையும் பாடலில் இழுக்கலாம், ஒரு சர்ச்சையும் வராது.

கோவிலில் காதல் செய்வதாக, கொலை செய்வதாக, காமெடி செய்வதாக, உருண்டு புரள்வதாக எல்லாம் காட்சிகள் எடுக்கலாம், ஒரு இந்துவும் எதிர்க்கமாட்டார்கள்

அவ்விஷயத்தில் இந்துக்களின் பெருந்தன்மையினை உற்று நோக்கத்தான் வேண்டி இருக்கின்றது, ஒருவேளை இப்படி எல்லாம் நீங்கள் எழுதி , பாடி, படமெடுத்து எங்களையோ எங்கள் மதத்தையோ என்ன செய்துவிட முடியும்? எனும் பெரு நம்பிக்கை இருக்கலாம், அதனால் எளிதாக கடந்து செல்லலாம்

அது உண்மையாகவும் இருக்க முடியும்