மாநில அரசை கலைக்க வேண்டுமென்றால் சும்மா கலைக்க மாட்டார்கள்

மாநில அரசை கலைக்க வேண்டுமென்றால் சும்மா கலைக்க மாட்டார்கள்

எல்லாவற்றிலும் அரசியல் கணக்கு உண்டு

எதிர்கட்சி என்பது டெல்லியில் செய்யும் அரசியலை பொறுத்தே மாநில அரசு கலைக்கபடும். அந்த அரசை கலைக்கும் அளவு இங்கிருக்கும் எதிர்கட்சிகள் திறமையாக செயல்பட வேண்டும்

அதில் முன்பு கலைஞர் அரசை கலைத்த காட்சி எல்லாம் தந்திரமிக்கவை. டெல்லியினை அப்படி சாதுர்யமாக நம்ப வைத்து காரியம் நடத்தினார்கள்

ஆனானபட்ட கலைஞர் அரசையே கலைக்க வைத்தவர்கள் அன்று இருந்தார்கள்

இன்று பழனிச்சாமி அரசை அசைக்க இவர்களால் முடியவில்லை

ஆனானபட்ட இந்திராவிடம் அடிவாங்கி பின் அவரிடமே கூட்டணி வைத்த வரலாறெல்லாம் உண்டு

மோடியினை அணைத்தும் இந்த காட்டாட்சியினை கலைக்கலாம், அது ஒன்றும் மாபெரும் தவறல்ல‌

ஒட்ட வேண்டிய நேரத்தில் ஒட்ட வேண்டும், வெட்ட வேண்டிய நேரத்தில் வெட்ட வேண்டும். கொள்கை கோட்பாடு எல்லாம் வேறு, அரசியல் கணக்கு வேறு

சரியாக செய்ய தெரியவில்லை அல்லது பயம் என ஒப்புகொள்ளுங்கள், பழனிச்சாமி ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கவும் தெரியவில்லை. மோடியினை இழுத்துபோடும் சாதுர்யமும் இல்லை என ஒப்புகொள்ளுங்கள்

இதனை ஒப்புகொள்ளுங்கள், சும்மா மோடி காக்கின்றார், மோடி இரட்சிகின்றார் என்பதெல்லாம் சப்பை கட்டு

இப்படியே விட்டால் 1 ஆண்டு பூர்த்தியான பழனிச்சாமி இன்னும் 3 ஆண்டுகள் அசால்ட்டாக ஆளுவார். பின் அவருக்கும் மகா முக்கிய இடம் அரசியலில் கிடைத்துவிடும்

அதற்குத்தான் எதிர்கட்சிகள் எல்லாம் விரும்புகின்றது போல‌