மானத் தமிழன் ஒருவன் அதிகாரத்தில்…. : சீமானின் சீற்றம்
தமிழர் வேண்டுமா? சிங்களர் வேண்டுமா? மானத் தமிழன் ஒருவன் அதிகாரத்தில் இருந்திருந்தால் சிங்களன் கை வைத்திருப்பானா? : சீமான் சீற்றம்
இது என்ன அர்த்தமில்லா கோஷம், சிங்களர் இந்திய அரசுக்கு ஏன் வேண்டும்? அவர்கள் என்ன வாக்களிக்கவா போகின்றார்கள்? சிங்கள 100 எம்பிக்கள் இந்திய அரசினை ஆதரிக்க போகின்றார்களா
அது இருக்கட்டும்….
முதல்வர் பழனிச்சாமி, உங்களை மானமில்லாதவன் என அங்கிள் சைமன் சொல்வதை கவனியுங்கள்
இன்றைய தமிழக உச்ச அதிகாரம் நீங்கள்தான், அதுவும் தமிழர்தான், ஆக உங்களுக்கு மானமிருந்தால் சிங்களன் கை வைப்பானா? என அங்கிள் வெடிக்கின்றார்.
மானமிருந்தால் இருக்கின்றது என அவருக்கு பதில் சொல்லுங்கள்
முன்பெல்லாம் தமிழன் முதல்வராக வேண்டுமென்றார், இப்பொழுது மான தமிழன் முதல்வராக வேண்டுமென்கின்றார்,
அடுத்தது முழு மான தமிழன் முதல்வராக வேண்டும் என்பாரோ?
அப்படி யார் இருக்கின்றார்கள் என்றால், நான் தான் அது என அவரின் வழக்கமான புன்னகையில் ஈஈஈ என இளித்துகொண்டே சொல்லுவார்..