மானமா? சூடா? யாருக்கு?

ஈழ இணைய தள பத்திரிகை இப்படி சொல்கின்றது, எழுதியிருப்பது ஈழ தமிழர்தான். இப்படி சொல்கின்றது கட்டுரை

“இந்தியாவில் மிக முக்கியமாக தமிழகத்தில் தமிழீழம்,
பிரபாகரன்ஆகிய இரண்டு பெயர்களும் நீர்த்துப்போக
மிக முக்கியமானவர்கள் திருமுருகன் காந்தி மற்றும் சீமான் ஆகியோர்

இவர்கள் இருவருமே டெல்லி மத்திய அரசினால் இவர்கள் எதற்கு பயன்பட போகின்றார்கள் என தெரியாமலே உருவாக்கபட்ட பரிதாபங்கள்

பிரபாகரன் பெயரை சொன்னால் தமிழகத்தில் நாயினும் கீழாக விரட்டியடிக்கபடுவார்கள் என உலகிற்கு சொல்ல சீமான் உருவாக்கபட்டார், அது நடந்தும் விட்டது

ஆனால் அதற்குள் தமிழக தொழிலதிபர், ஐரோப்பிய ஈழமக்களிடம் பெரும் தொகையினை கறந்துவிட்டார் சீமான், இப்பொழுது எல்லோரும் மொத்தமாக அடிக்க தயாராகின்றார்கள்.

எவனாவது பங்குனி 17 என கிளம்பினால் என்ன நடக்கும் என காட்ட உருவாக்கபட்டவர்தான் திருமுருகன் காந்தி அதுவும் நடந்துவிட்டது

திராவிட கட்சிகளின் மக்கள் செல்வாக்கை குறைக்க, தமிழனாலே திராவிடத்தை குலைக்க உருவாக்கபட்டவர்கள் இவர்கள்

யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிர்ப்பும் நையண்டியும் கூறுவதே சீமானின் 
முதல் வேலை,

திரையுலகில் இருந்து வரக்கூடாதென்றால், இவர் எங்கிருந்து வந்தார்?

அரச ஊழியர்ஓய்வெடுத்த பின் அரசியலுக்கு வருவதுபோல் தான் திரையுலகிலிருந்து ஒதுங்கி வருவதும், அதையெல்லாம் தடுப்பதாயின் இளமைப்பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே களத்தில் இறங்க முடியும்,

அப்படியொரு நிலையில் சீமானும் அரசியல் பேசக்கூடாதென்றால் அவர் சம்மதிப்பாரா??”

இப்படி சொல்லும் கட்டுரை சில கேள்விகளை எழுப்புகின்றது, அடுத்த கேள்விதான் பயங்கர ரகம்

தமிழனை தமிழன் ஆளவேண்டும் என சொல்லும் சீமான் அன்புமணி ராமதாஸை ஆதரித்தால் என்ன?

(இனி ராமதாஸ் கும்பல் இலங்கை வரை சென்று கட்டுரையாளருக்கு கண்ணீர் நன்றி சொல்லலாம்)

இப்படி 10 பக்கத்துக்கு போட்டு அடித்துவிட்டு கடைசியில் கேட்டார்கள் பாருங்கள் கேள்வி, அப்படியே அடித்துபோடும் கேள்வி

“எங்களுக்கு சொந்தமான கச்சதீவினை தமிழகத்திற்கு கேட்க நீ யார் சீமான்?”

கொஞ்சமேனும் மானமோ, சூடு சுரணையோ உள்ளவராக இருந்தால் பாம்பன் பாலத்தில் சீமான் தூக்குபோட்டு சாகும் அளவு பயங்கரமான கேள்வி இது

ஆனால் மானமா? சூடா? யாருக்கு?