மாபெரும் அச்சுறுத்தல் அவர்கள்தான்
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பலத்த எச்சரிக்கை வந்து கொண்டேதான் இருந்தது
இந்த அரசு தான் ஒரே எதிரி என கருதும் பாகிஸ்தானையும் அது தயாரிக்கும் தீவிரவாதிகளையும் மட்டுமே கண்காணிக்கின்றது
நாட்டின் எதிரிகளும் ஆபத்துக்களும் அவர்கள் மட்டுமல்ல, இத்தேசத்தின் உண்மையான தீவிரவாத இயகம் மாவோயிஸ்டுகள், அவர்கள்தான் தேசத்தின் மிகபெரும் மிரட்டல்
சந்தேகமில்லை அவர்கள் பின்னால் சீனா இருக்கின்றது இன்னும் ஏகபட்ட சக்திகள் இருக்கின்றது
நேபாளம் அவர்களின் கோட்டையாக இப்பொழுது திகழ்கின்றது, அதன் தொடர்ச்சியாக கிழக்கு மாநிலங்கள் தொடங்கி பல மாநிலங்களில் அவர்களின் பலம் நீடிக்கின்றது
புல்வாமா என்றால் உடனே பாகிஸ்தான் மேல் தாக்குதல் நடத்திய இந்த அரசு, இந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்காக நேபாளம் மற்றும் இன்னும் சில நாடுகளின் காடுகளில் தாக்குமா என்றால் தாக்காது
காரணம் அதன் தன்மை வேறாகிவிடும் என்பதால் மாட்டார்கள், ஆனால் பாகிஸ்தான் என்றால் கிளம்புவார்கள்
காஷ்மீரிய தீவிரவாதிகள் மேல் மட்டும் அரசு வன்மம் கொண்டு திரியும் பொழுது நாங்களும் களத்தில் உண்டு என காட்டிவிட்டனர் மாவோயிஸ்டுகள்
பாகிஸ்தான் என்றால் பொங்கும் பாஜகவும் அதன் அடிப்பொடிகளும் மாவோயிஸ்டுகள் என்றால் பெரிதும் கண்டுகொள்ளமாட்டார்கள்
மாவோயிஸ்டுகளுக்கு இத்தேசம் முடிவு கட்டியே தீரவேண்டும், மாபெரும் அச்சுறுத்தல் அவர்கள்தான்
மாபெரும் நடவடிக்கை எடுத்து அவர்களை கருவறுக்க வேண்டிய நேரமிது