மாமன்னனாக திப்பு கண்ணில் தெரிவான்
திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் சிந்து பஞ்சாப் மாகாணங்களை போல மைசூர் இஸ்லாமிய பகுதியாக மாறியிருக்கும்
குறைந்தபட்சம் ஐதரபாத் போல இஸ்லாமிய அடையாளமாக மாறியிருக்கும்
அவன் கட்டாயமதமாற்றம் எதுவும் செய்யவில்லை, அப்படி செய்தால் தன் ஆட்சி நிலைக்காது என அஞ்சினான், ஐதர் அலி சொல்லிகொடுத்த பாடம் அது
மைசூரின் வழி வழி மன்னர் அல்ல அவர்கள், உடையார்களின் ஆட்சி சீரழியும்பொழுது வேலைக்காரனான ஐதர் அதை தாங்கினான்
மாபெரும் உயரத்துக்கு அதை எழுப்பினான், திப்புவும் அப்படியே உருவானான்
கடைசிவரை இந்துமதத்து மேலான அவனின் மதிப்பும் மரியாதையும் அப்படி இருந்தது
கட்டாய மதமாற்றம், இந்து எதிர்ப்பு, இஸ்லாமிய வெறி எல்லாம் அவனிடம் இருந்தால் இன்று கன்னடம் முழு இஸ்லாமிய மாநிலமாக குறைந்தபட்சம் மலபார் போல இஸ்லாமிய அடையாளமாக மாறியிருக்கும்
அதுவா நடந்தது?
வரலாற்றை புரட்டி சொந்த மூளை இருந்தால் எல்லாம் சீர் தூக்கி பாருங்கள், மாமன்னனாக திப்பு கண்ணில் தெரிவான்