மாய தேவர்

அதிமுக 1972ல் தொடங்கபட்டாலும் அக்கட்சியின் பலத்தை காட்டியது அது சந்தித்த முதல் தேர்தல் 1974ம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்தது

திமுகவில் இருந்து பிரிந்த அக்கட்சியின் முதல் தேர்தல் என்பதால் பெரும் பரபரப்பு நிலவிற்று

அப்பொழுது அதிமுகவின் வேட்பாளராக மாயன் என்பவர் நிறுத்தபட்டார், பின்னர் அவரின் சாதியும் சேர்க்கபட்டு “மாய தேவர்” என்ற அறிவிப்பு வெளியானது

அண்ணா நாமம் வாழ்க என அடிக்கடி சொன்ன எம்ஜிஆரின் அண்ணா கொள்கை அப்படித்தான் மாறியிருந்தது

அந்த தேர்தலில் அதிமுக மிகபெரிய வெற்றியினை அடைந்தது, அக்கட்சியின் பலம் என்ன என்பதை தமிழகமும் இந்தியாவும் குறிப்பாக அன்றைய முதல்வர் கருணாநிதியும் புரிந்து கொண்டார்கள்

அதுவரை “அட்டை கத்தி தலைவன்” “மலையாளி” “மேக்கப் மன்னன் கட்சி” என்றெல்லெலாம் திமுகவினரால் நகையாடபட்ட அதிமுக தன் பலத்தை காட்டிற்று

இந்த வெற்றிக்கு பின்பே தன் பக்கம் ஒரு தேவர் சாதி அடையாளம் இருந்தாக வேண்டும் என எம்ஜிஆர் விரும்பினார், அவர் காலம் வரை வீரப்பன், திருநாவுக்கரசர் என யாராவது அப்படி இருக்கும்படி பார்த்து கொண்டார்

ஜெயாவும் சசிகலாவினை அருகில் அமர்த்தி அந்த பாரம்பரியத்தை காத்தார்

பழனிச்சாமியும் பன்னீர்செல்வத்தை அப்படித்தான் இருக்க சொன்னார், ஆனால் இவ்வளவு சக்தியுள்ள நாற்காலி தலைவர் நாற்காலியாக மாறினால் என்ன என கேட்டதில்தான் சர்ச்சை வெடித்தத

அந்த திண்டுக்கல் தேர்தலில் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது, ஆம் அங்கு இரண்டாம் இடத்துக்கு வந்திருந்தது திமுக அல்ல மாறாக காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்

ஆம், காங்கிரஸ் எழுச்சி கண்டது

நாகர்கோவில் போன்ற பல இடங்களில் திமுகவினை பின்னால் தள்ளிய காங்கிரஸ் ., எம்ஜிஆர் அலையிலும் தான் இரண்டாம் இடம் பிடிக்கமுடியும் என நிரூபித்தது

அப்பொழுதும் திமுக தலைவர் கருணாநிதியின் கவலை அதிமுக வென்றது பற்றி அல்ல மாறாக காங்கிரஸ் இப்படி எழுச்சி பெறுகின்றதே என்பதில்தான் இருந்தது, அவரின் பெருங்கவலை அன்று அதுதான்

இதெல்லாம் இன்றைய தமிழக காங்கிரஸாருக்கும் அவர்கள் தலைவர் அழகிரிக்கும் தெரியவில்லை என்பதுதான் சோகம்

அதிமுகவின் முதல் வெற்றியினை பெற்றுகொடுத்த மாயதேவர் நேற்று காலமாகிவிட்டார், அவரோடு தொடங்கிய கட்சியின் வெற்றிபயணம் மட்டுமல்ல கட்சிபயணமே என்னாகும் என்பது விரைவில் தெரியும்