மாரிதாஸ் வீடியோவில் என்ன சொல்லபோகின்றார்

ஆளாளுக்கு சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிய கேபிளின் ஆதாரம் இதோ என காட்டுகின்றார்களே தவிர,

இங்கு என்ன நடந்தால் அமெரிக்காவுக்கு என்ன? திமுகவினர் எச்சிறையில் இருந்தால், எங்கு எவளை வைத்திருந்தால் அவர்களுக்கென்ன என்ற கேள்விகளை காணவே இல்லை

அது வரவும் வராது, நம்மவர் சிந்தனை அவ்வளவுதான்,

சென்னைக்கு அமெரிக்க கப்பல் வந்தால் அப்படியா என்பார்கள்? ஏன் எதற்கு என்ற சிந்தனை எல்லாம் இல்லை

தமிழகத்தை அமெரிக்கா கண்காணிக்க வேண்டிய அவசியம் என்ன?

இதுதான் அரசியல் உளவு, நடப்பதை ஒன்றுவிடாமல் கண்காணிப்பார்கள் யாரை வளைத்தால் இந்தியாவில் எதை செய்யமுடியும் என மிக துல்லியமாக கணிப்பார்கள், அவர்களுக்கு உதவ வேண்டிய விதத்தில் வெளிதெரியாமல் உதவுவார்கள்

ஈரோட்டு ராமசாமியினை பிரிட்டிஷ்காரன் அப்படி கையாண்டான், அவனுக்கு அடுத்த வல்லரசான அமெரிக்கா திமுகவினை அப்படித்தான் கையாண்டது, இல்லையேல் முதலாளித்துவ நாடு பாட்டாளி அண்ணாவினை கட்டிபிடிக்க என்ன உண்டு?

பதிலுக்கு சோவியத் யூனியனும் என்னவோ செய்து காமராஜரை எல்லாம் தழுவியது

பார்பதற்கு ஒன்றுமில்லா சம்பவங்கள் போல் இருந்தாலும் இவை எல்லாம் ஆழமாக கவனித்தால் சொல்லும் செய்திகள் ஏராளம்

இப்படிபட்ட கண்காணிப்புகள் இருப்பதால்தான் தமிழகம் இந்தியாவோடு ஒட்டுவதை பல சக்திகள் விரும்பாது, அவர்களுக்கான உத்தரவு எங்கிருந்தோ வரும்

இந்துமதத்தை தமிழனிடமிருந்து ஒழி அவன் இந்தியனாகமாட்டான், இந்தி படிப்பதை ஒழி அவன் இந்தியனாகமாட்டான், வட இந்தியனையும் தமிழனையும் கலக்கவிடாதே, ஈழபோராட்டத்தில் இந்திய ராணுவத்தையே எதிர்த்து நில் போன்ற கட்டளைகள் எல்லாம் அங்கிருந்துதான் வரும்

இந்திரா, ராஜிவ் எல்லாம் விரட்டபட்டது அப்படித்தான், இங்கு தேசியம் வளரகூடாது என்பது மேலிட கட்டளை

அதன் தொடர்ச்சிதான் சர்வதேச ஆயுதகண்காட்சியில் மோடி மீதான கருப்பு பலூன் இம்சைகள்

ஆனால் இம்மாதிரி விஷயங்களை காஷ்மீரிலே கையாள கற்றுகொண்ட மத்திய அரசு தமிழகத்தை மிக அழகாக கையாள்கின்றது

முள்ளை முள்ளால் எடுக்கின்றார்கள், செய்யவேண்டியதை சரியாக செய்கின்றார்கள்

சில மறைமுக ஆட்டங்களை அப்படி மறைமுகமாகத்தான் ஒடுக்கமுடியும், அந்த பணிதான் நடக்கின்றது

இதை எல்லாம் விடுங்கள், ஒரு தகவலுக்காக சொன்னோம் அவ்வளவுதான், இந்த அமெரிக்க‌ கேபிள் சாதார விஷயம் அல்ல‌

இதனால்தான் அமெரிக்க தூதரகமே ஈரானில் இருக்க கூடாது என விரட்டி அடித்தார் கோமேனி, இன்றும் ஈரான் தனித்து நிற்கின்றது. சென்னை அமெரிக்க தூதரகம் ஒழுங்காக விசா மட்டும் கொடுக்கும் என நினைத்தால் உங்கள் நினைப்பு தவறு.

சரி மாரிதாஸ் வீடியோவில் என்ன சொல்லபோகின்றார், பதிலுக்கு திமுகவினர் எந்த நீதிமன்றம் செல்கின்றார்கள் எனபார்ப்போம்