மார்ச் 6, 1967ல் மாபெரும் புரட்சியினை திமுக செய்த மகத்தான நாள்
1900களில் பிராமணர் அல்லோதருக்கான சங்கமாக , மற்ற சமூக மக்களுக்கான நீதியினை பெற்றுதரும் போராட்டமாக அது தொடங்கியது
பின் நீதிகட்சியாக உருவெடுத்தது. சமூக நீதிக்காக போராடியது, 1936லே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் நடத்தியது. திராவிடருக்கு மானமும் அறிவும் அவர்கள்தான் ஊட்ட ஆரம்பித்தார்கள்.
இன்றும் தமிழகமும் கேரளமும் அடங்க மறுத்து நிற்க அவர்கள் ஊன்றிய விதையே காரணம்
சுதந்திரத்திற்கு முன்னரான சென்னை மாகாணத்தில் அது ஆட்சிக்கும் வந்தது, தேவதாசி ஒழிப்பு சட்டம் , பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு என பல முன்னோடி சட்டங்களை அன்றே சொன்ன கட்சி அது
பின்னர் அது காங்கிரசின் சதியால் உடைந்தது, கிட்டதட்ட அழியும் நிலைக்கு சென்றது. இனி அதனால் ஆபத்தில்லை என அன்றைய பார்ப்பண காங்கிரஸ் நிம்மதி அடைந்த நேரத்தில் பெரியாரின் திராவிட கழகமாக அது மறுபிறப்பு எடுத்தது
ஆனாலும் சுதந்திரம் பெற ரத்தம் சிந்தி தியாகம் செய்தது காங்கிரஸ், தியாகிகள் நிரம்பியது காங்கிரஸ் என்ற பெருமயக்கத்தில் தேசம் இருந்தபொழுது அதன் குரல் எடுபடவில்லை
தேசவிடுதலை மயக்கத்தில் சமூக நீதி அமுக்கபட்டது. அம்பேத்குரலே எடுபடாத பொழுது பெரியார் குரல் எடுபடுமா?
இந்நிலையில்தான் திமுக உதித்தது. தமிழரின் குரலை அது எதிரொலித்தது, கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிறுத்தியது
திராவிட நாடு எனும் கோரிக்கையினை கைவிட்டு ஒருங்கிணைந்த இந்தியாவில் சுயாட்சி என்ற முடிவுக்கு அது வந்தபோது மக்கள் திமுகவினை நேசிக்க தொடங்கினர்
அன்று நீதிகட்சியினை எந்த ராஜாஜி வீழ்த்தி ஆட்சிக்கு வந்தாரோ அந்த ராஜாஜிவீட்டுக்கு போக வழிவகுத்தது திமுக. ஆம் நீதிகட்சியின் பழிவாங்கலாக அதனை செய்தது.
இந்தி எதிர்ப்பில் மாபெரும் போரை நிழத்தி நேருவினையே வழிக்கு கொண்டுவந்ததும் திமுக
பின் காமராஜரையும் வீழ்த்தியது. காமராஜரின் பல சாதனைகளையும், அரசியலையும்மீறி அது வென்று காட்டியது
அன்று திமுகவின் வெற்றி மொத்த இந்தியாவினை அல்ல, மொத்த உலகினையும் அதிர வைத்தது
பணக்காரர்களும், ஜமீனும், தொழிலதிபர்களும் நிரம்பிய அதேநேரம் காமராஜர் போன்ற எளிய பிம்பங்களையும் முன்னால் காட்டி பெரும் இயக்கமாக வியாபித்து நின்ற காங்கிரஸை ஒரு பராரி பாமரர்களை கொண்ட கட்சி வீழ்த்தியது மாபெரும் சாதனை என்றே பார்க்கபட்டது.
வன்முறை இன்றி பாட்டாளிகட்சி ஒன்று , உழைக்கும் மக்களின் அடித்தட்டு கட்சி ஒன்று அதிகாரத்திற்கு வந்த அதிசயத்தை இந்தியாவும் , உலகமும் கண்டு அதிசயித்தன
இந்த வெற்றிதான் பின்னாளில் காங்கிரஸை அசைக்க முடியும் என்ற நம்பிக்கையினை எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்தது, மாநில கட்சிகள் உருவானதும், மாநில சுயாட்சி கோஷம் எழும்ப ஆரம்பித்ததெல்லாம் இதற்கு பின்புதான்
அந்த விதையினை ஊன்றி நம்பிக்கையினை கொடுத்தது திமுக, ஆம் இதே நாள்
இதே மார்ச் 6, 1967ல் அந்த மாபெரும் புரட்சியினை திமுக செய்த மகத்தான நாள் இது.
இது நிச்சய திமுகவினரின் நாள்.
அந்த எழுச்சிமிக்க திமுகவினை ஒழிக்க ராமசந்திரன் எனும் கோடாரி காம்பினை பயன்படுத்தினார்கள், அது பின் ஜெயலலிதா எனும் தலைவலியினை உருவாக்கிற்று
இந்த இருவரையும் கடந்து மறுபடியும் திமுக ஆட்சிக்கு வரும் நிலையில்தான் ரஜினி என்பவர் நான் ராமசந்திரன் ஆட்சியினை கொடுப்பேன் என வந்து நிற்கின்றார்
சங்கிலி கண்ணியாக ரஜினியினை தொடுக்கும் சக்தி எது என்பது உங்களுக்கு தெரியாமல் போகாது
அதுவும் மிக சரியாக திமுக தன் 51ம் புரட்சி நாளை கொண்டாடும் நேரத்தில் அவரை பேச சொல்லி இருக்கின்றார்கள் அல்லவா? அதுதான் விஷயம்
யார் வந்தால் என்ன? போனால் என்ன?
நீதிகட்சியின் தொடர்ச்சியாக வந்த திமுக அதன் பயணத்தை அதே போராட்டத்தோடு தொடர்ந்துகொண்டே இருக்கும்
அந்த திமுகவினரினருக்கு “புரட்சி நாள்” வாழ்த்துக்கள்