மார்ட்டின் எனும் லாட்டரி சீட்டு பேர்வழி
அந்த நபர் பெரும் மோசடிக்காரர், லாட்டரி மோசடி தொடர்பாக தமிழகத்திலிருந்தே விரட்டபட்டவர். ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் அவர் செய்த நல்ல காரியம் இந்த நபரை ஓட விரட்டியது.
பின் அந்த நபர் எப்படியோ சுற்றி கலைஞரிடம் வந்தார். தன் முதுமையான காலத்தில் அதிகாரிகளை நம்பிய கலைஞர் அந்த நபரை அணைத்துகொண்டார், அவரின் தயாரிப்பில் கலைஞர் வசனம் எழுத படம் கூட வந்தது.
அந்த நபர் மார்ட்டின் எனும் லாட்டரி சீட்டு பேர்வழி.
கலைஞர் வசனம் எழுதிய இளைஞன் படம் மார்ட்டின் தயாரிப்பு
கலைஞரின் சர்ச்சைகுரிய பக்கங்களில் இந்த மார்ட்டின் என்பவரை அருகில் அமர்த்தியதும் ஒன்று, கலைஞருக்கு இவரை பற்றி தெரியாதா? அல்லது தெரிந்தும் அருகில் அழைத்தாரா என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை.
அப்படி பெரும் மோசடிக்காரரன் மார்ட்டின் மகனே டைசன். இப்பொழுது தமிழர் விடியல் கட்சி என்றொன்றை வைத்துகொண்டு, இந்த திருமுருகன் காந்தியோடு சிறை சென்றுவிட்டு , இப்பொழுது தமிழகம் தாய்நாடு அது இது என பேசிகொண்டிருப்பவர்.
இதில் தமிழுணர்வோ, தமிழக பற்றோ கொஞ்சமும் இல்லை. எப்படியாவது காலூன்றி லாட்டரி மோசடியினை தொடரவேண்டும், அதற்கொரு வேடம் வேண்டும், போட்டாயிற்று.
அதற்கு கோஷம் போட ஒருவன் வேண்டும், அந்த திருமுருகன் என்பவனை சேர்த்தாயிற்று.
மார்ட்டினே பர்மா அகதி வகையறா, அதுவும் வடகிழக்கு மாநிலங்களில் வளர்ந்தவர். தமிழன் ஏமாளி என நினைத்து லாட்டரி விற்க வந்தவர். அவர் ஏமாற்றியதும் கொஞ்சமல்ல, அரசு தடை விதித்தபின்னும் அவர் லாட்டரி வியாபாரம் மறைமுகமாக நடந்தது
ஜெயலலிதா சாட்டையினை சுழற்றினார், ஆனால் கலைஞர் ஏன் ஆதரித்தார் என்பது இன்றுவரை தெரியாது.
அதனால் டைசனை, அவனின் அடியாளான திருமுருகனை திமுக கண்டுகொள்ளாது, அல்லது கண்டுகொள்ள முடியாது.
ஆனால் உண்மை இதுதான்
ஜெயா மீது ஆயிரம் சர்ச்சை இருந்தாலும், இந்த புலி ஆதரவு, பிரிவினை கோஷ்டிகளை எல்லாம் மிக தீவிரமாக அடக்கி வைத்திருந்தார்
அங்கிள் சைமன் ஒரு காமெடியன் என்பதால் அவரை மட்டும் ஜெயா அதிகம் கண்டுகொள்ளவில்லை, இன்னொன்று இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற அங்கிளின் ஜால்ராவும் அப்படி இருந்தது.
இன்று அவரில்லா தமிழகத்தில் பேரரிவாளனுக்கு பரோல், டைசனின் அல்ட்ராசிட்டி, திருமுருகனின் கசவாளித்தனம் எல்லாம் எல்லை மீறுகின்றன.
பழனிச்சாமி ஆட்சியில் லாட்டரி மோசடிக்காரன் எல்லாம் தமிழனுக்கு விடியல் கொடுக்க வந்ததுதான் தமிழக சோகம்