மார்தாண்டம் கிறிஸ்தவ சாமியாரின் 56 இன்ஞ் மார்பு
மார்தாண்டம் கிறிஸ்தவ சாமியாரின் 56 இன்ஞ் மார்பை கண்டதாக பல செய்திகள் வருகின்றன
கிறிஸ்துவத்தில் ஏகபட்ட சபைகள் உண்டு, கத்தொலிக்கம் வேறுமாதிரியானது. இந்த பிரிவினைகள்தான் அட்டகாசத்தின் உச்சம்
கிறிஸ்தவ துறவி திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கத்தோலிக்க கட்டளை. அதனால் அவர்கள் 7 அல்லது 10 வருடம் படித்து, பல தவமுயற்சிகளை மேற்கொண்டு மனதை கட்டுபடுத்தும் பல பயிற்சிகளை செய்துவிட்டு சேவைக்கு வருவார்கள்
இதனால் பெரும்பான்மை சர்ச்சையில் அவர்கள் சிக்குவதில்லை, அதிலும் கூட சில பதர்கள் உண்டு. அவை எல்லாம் ஒழுங்காக பயிற்சி எடுக்காத பதர்கள்
இந்த பிரிவினை இருக்கின்றதே இவர்களுக்கு ஒரு கட்டுபாடும் இல்லை, தமிழ் வாசிக்க தெரியுமா? கையில் பைபிள் இருக்கின்றதா? வேலை வெட்டி இல்லையா? நானும் பாஸ்டர் என கிளம்புவார்கள்.
வருமானம் எங்கிருந்தோ வரும் , கேட்க கூடாது ஆம் தேவன் அவர்களை வழி நடத்துவார்
திருமணம் செய்யாதே என சொன்னால் பழைய ஏற்பாடில் திருமணம் செய்தார்கள் தெரியுமா? என்பார்கள்,
பெண்களிடம் நெருங்காதே என்றால் அடேய் அற்பனே இயேசுவிற்கும் பெண் சீடர் உண்டு. நாங்கள் எல்லாம் பெண்ணின் ஆன்மாவினை மட்டும் காண்போம் என்பார்கள்.
அதாவது ஒரு துறவிக்கு இருக்க வேண்டிய குணமோ, துறவிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டுபாடோ இல்லை உண்மை துறவறமோ அவர்களிடம் சுத்தமாக இல்லை அல்லது அதைபற்றி அறவே தெரியாது
இதனால் மானிட இயல்பின் சாதாரண விஷயங்களில் விழுந்துவிடுகின்றார்கள்.
இப்படி அவர்கள் கண்ணும் கருத்துமாக தேவ ஊழியம் செய்யும்பொழுது சிலர் இப்படி சிக்குவார்கள், அதைபற்றி கேட்டால் சாத்தான் சோதனை என்பார்கள்
அந்த பொல்லாத சாத்தான் ஒரு பாதிரியாருக்கு பழம் கொடுத்து சோதித்திருக்கின்றது, பாதிரியார் பழம் உண்ட காட்சிகள் ஆங்காங்கு பரவுகின்றன
இதெல்லாம் சாத்தானின் சோதனை, கர்த்தராகிய தேவனின் ராஜ்யம் மார்த்தாண்டம் பக்கம் வளரகூடாது என்பதனால் அச்சாத்தான் இந்த வேலையினை செய்துவிட்டது
எதற்கும் சில கட்டுபாடுகளும், சட்ட திட்டங்களும், முறையான படிப்பும், பயிற்சியும் மகா அவசியம். குறிப்பாக போதனைக்கு மிக அவசியம்
அதை செய்யாமல் கர்த்தர் அழைத்தார் என்பதும், இப்படி விழுந்தால் சாத்தான் கொடுத்த கனி என்பதும் இப்படிபட்ட போலிகள் ஸ்டைல்
நமக்கு இன்னும் பாதிரி கனி தின்ற காட்சி கிடைக்கவில்லை, கிடைத்தால் எப்படி எல்லாம் அந்த சாத்தான் சோதித்திருக்கின்றது என பார்க்கலாம்
அது மார்த்தாண்டம் பகுதி என்பதால் பலாபழம் கொண்டு சோதித்திருக்க வாய்ப்பு மிக அதிகம்