மாறன்ஸ் விடுவிப்பு … குவைத் விசா வழங்க தடை…. மெரினா எண்ணை கழிவு … இன்னும் பிற …

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம்.

நல்லவேளையாக மாறன் சகோதரர்களால் பாதிக்கபட்ட‌ சிவசங்கரன் தான் குற்றவாளி தீர்பளித்து அவரை உள்ளே தள்ளாமல் விட்டார்களே, அதனால் ஆனந்த கண்ணீரோடு உணர்ச்சி பொங்க சொல்லலாம் .

நிதிகளை விடுவித்த இந்திய நீதி வாழ்க……

இனி அந்த மலேசிய ஆனந்தகிருஷ்ணன் இந்தியா வந்து ஆனந்தமாக உச்சநீதிமன்றம் முன்பு போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்

அவருக்கும் ஏதோ ஒரு விருது கொடுத்து கவுரவித்தாலும் கவுரவிப்பார்கள்.


அமெரிக்கா பாணியில் குவைத்: 5 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா வழங்கத் தடை

ஒரு அடிமை தன் எஜமான் செய்வதை அப்படியே பின்பற்றுவதில் என்ன விசித்திரம்?

ஒரு காலத்தில் சதாம் உசேன் ஏன் குவைத்தை மிதித்து காலில் வைக்க முனைந்தார் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரியும்.


கடலில் படிந்த கச்சா எண்ணெய் படலத்தை பக்கெட்டில் அள்ளுகின்றார்கள் : செய்தி

சின்ன அம்மா வழிகாட்டல் தானே , பின் அப்படித்தானே பக்கெட், பினாயில்,விளக்குமாறு என்றுதான் புத்தி போகும்.

என்ன இருந்தாலும் தொழில் முறை புத்தி அல்லவா?


அகதிகள் விவகாரம் தொடர்பாக ஓபாமாவின் முடிவினை மீறி ஆஸ்திரேலிய பிரதமருடன் டிரம்ப் சர்ச்சை, தொலைபேசியினை பாதியில் துண்டித்ததால் உலக அரசியலில் பரபரப்பு

பதவிக்கு வந்த 10 நாட்களிலே மனிதர் இவ்வளவு டென்சனாகிவிட்டாரா?

ஒரு தொலைபேசி அழைப்பினையே முழுவதும் பேசமுடியாத இவரா முழு பதவிக்காலமும் இருந்து ஆளபோகின்றார்?

டிரம்ப் இடையில் பிய்த்துகொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


கச்சா எண்ணெயையே அகற்றமுடியாத இவர்கள் எப்படி அணுஉலை கழிவுகளை அகற்றுவார்கள்? -சீமான் ஆதங்கம்

அங்கிள் அணுமின் நிலையங்களை மூட போராடி சிறை சென்று 10 ஆண்டுகளுக்கு பின் இன்றுதான் விடுதலையானார் என்பது குறிப்பிடதக்கது.


 கடலில் கலந்திருக்கும் கழிவுகளை அகற்ற இளைஞர்களின் உதவி தேவை -முதல்வர்

இப்படி அழைத்தால் குழந்தை கூட வராது.

எண்ணை கழிவினை அகற்றிவிட்டு, அப்படியே அரசியலில் கலந்திருக்கும் சாக்கடை கழிவுகளை அகற்ற இளைஞர்களின் உதவி தேவை என சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்படி சொன்னால் ஓடி வருவார்கள்


அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள் : அதிமுக அரசுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்

அப்படியும் அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றுங்கள் என இவர் அதிமுக அரசினை வலியுறுத்தவில்லை பார்த்தீர்களா? இதுதான் தொழிலில் மிகுந்த கவனம் என்பது.


மெரினாவில் கூடியவர்கள் இப்போ எங்கே போனார்கள்??. கடலில் கலந்த ஆயிலை போய் சுத்தப்படுத்தலாம் : எச்.ராஜா

இந்த மத கலவரம் செய்தவன், பிள்ளையாருக்கு பால் ஊற்றியவன், பாபர் மசூதி இடிக்க போனவன் எல்லாம் இப்பொழுது எங்கு போனார்கள்? அவர்கள் கூடி கடலை சுத்தபடுத்தினால் என்ன?

கேள்வி கேட்க யாருக்கு தெரியாது மிஸ்டர் ராசா?


மக்கா.. எனக்கு நல்லநேரம் ஆரம்பிச்சி 57 நாள் ஆகுது..

இன்னும் கொஞ்சநாளைக்கு டைம் ரொம்ப நல்லா இருக்கு பங்காளிகளா..

ஒரு பயலும் நம்மள அசைக்க முடியாது

Image may contain: 8 people