மாலத்தீவால் மோடிக்கு என்ன பிரச்சினை?
எல்லா நாட்டு ராணுவத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அந்நிய நாட்டில் தன் படைகளை இறக்கி தங்கள் வலிமையினை , வேகத்தை சோதித்துபார்க்கும் எண்ணம் இருக்கும்
எவ்வளவு நேரம்? எவ்வளவு துல்லியம்? எவ்வளவு வீரர்களை எவ்வளவு குறிப்பிட்ட நேரத்தில் இறக்கலாம்? ஆயுதங்கள் நிலை என்ன? என்னென்ன சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்? அதனை மேம்படுத்துவது எப்படி போன்ற தரவுகளை அவர்கள் அதில்தான் தெரிந்துகொள்ள முடியும்
உலகெல்லாம் அமெரிக்கா சண்டையிடுவதும், இன்னும் சில நாடுகள் பல விஷயங்களை பரிசோதிப்பதும் அப்படித்தான்
இந்தியா முன்பு வங்கப்போரில் பரீசிலீத்து வெற்றிபெற்றது, இலங்கையிலும் அந்த முயற்சியில் ஒருமுறை வென்றது, இரண்டாம் முறையும் அப்படியே இறங்கியது, தளபதி சுந்தர்.ஜியின் அமைதிபடை அப்படியே சென்றது
ஆனால் கொஞ்சமும் எதிர்பாரா புலிகளின் அந்நியநாட்டு, சிங்கள நாட்டு கூட்டு சதியில் இந்தியா திணறியது
இப்பொழுது மாலத்தீவிற்கு இந்திய ராணுவம் வரவேண்டும் என குரல்கள் ஒலிக்கின்றன, நிச்சயம் இந்திய ராணுவ தளபதிக்கு ஒரு ரியல்டைம் பயிற்சி எடுக ஆசை மிகுந்திருக்கும்
ஆனால் இந்த மோடி அரசு என்ன நினைப்பிலோ இருப்பதால் இதில் அக்கறை இல்லை போலிருக்கின்றது
மோடி அரசு இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றார்கள், ஆனால் அடுத்த தேர்தலில் கடும் அக்கறையாக இருக்கும் மோடி இதில் என்ன முடிவு எடுப்பாரோ தெரியவில்லை
இந்திய ராணுவத்தை அனுப்பி பார்க்கலாம் கப்பற்படை முதல் விமானபடை வரை நல்ல பயிற்சி கிடைக்கும்
மோடிக்கு என்ன பிரச்சினை?
எப்படி உலகெல்லாம் சுற்றும் தன்னை மாலத்தீவு அழைக்காமல் இந்திய ராணுவத்தை அழைக்கலாம் எனும் கோபமாக இருக்கலாம்.