மாலத்தீவில் நடப்பது என்ன?

No automatic alt text available.

இலங்கை அளவு இல்லாவிட்டாலும் மாலத்தீவும் முக்கிய கடற்பகுதி நாடு, அதனை வளைத்து போட இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்றுநாடுகளும் முயன்றுகொண்டே இருக்கும்

இஸ்லாமிய நாடு என்பதால் அதன் கரிசனம் பாகிஸ்தான் மீதே உண்டு , இதனால் சீனாவிற்கும் துறைமுக இடமளித்திருக்கின்றது

இந்தியாவின் பிடி இந்திரா காலத்தில் இருந்தது, பின் ராஜிவ் காலத்தில் பிடியினை வலுபடுத்த ரகசிய திட்டெமல்லாம் தீட்டபட்டது

உலக வரலாற்றிலே முதல்முறையாக எங்கிருந்தோ வந்தவர்கள் மாலத்தீவில் புரட்சி செய்தனர், புரட்சி சறுக்கியது இந்தியபடை ஓடிசென்று நாங்கள் உங்கள் நண்பர் என மாலத்தீவை மீட்டது

அதன் பின் ராஜிவிற்கும் ஈழபோராளி உமாமகேஸ்வரனுக்கும் பெரும் விரோதம் எல்லாம் நடந்தது உண்மை, உமா மகேஸ்வரனின் டெலோ தனியாக ஏதும் மாலத்தீவில் செய்ததா? இல்லை இந்திய உளவுதுறையுடன் சேர்ந்து செய்ததா என்பது பற்றி தகவல் இல்லை, இருந்தாலும் சொல்ல கூடாது

உமா மகேஸ்வரனின் குறியில் ராஜிவ் இருந்தார், அதைவிட முக்கியம் ராகுலையும் பிரியங்காவினையும் கடத்த திட்டமிடும் அளவுக்கு உமா மகேஸ்வரனின் கோபம் இருந்தது, அன்றே ராகுலை உமா மகேஸ்வரன் கடத்தியிருந்தால் தமிழக காங்கிரசாவாது உருப்பட்டிருக்கும்

யார் இந்த உமா மகேஸ்வரன்? சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனோடு மோதினார் அல்லவா? அவரேதான்

பின் அந்த உமா மகேஸ்வரன் கொல்லபட, ராஜிவின் விதி பிரபாகரனால் முடிக்கபட்டது.

இப்படியாக மாலத்தீவில் யார் மாலையிடுவது என பலநாடுகள் மோதிகொண்டிருக்கும், பயங்கரமாக தாஜா செய்வார்கள், ஏதும் இயற்கை அழிவு என்றால் கூட ஆளாளுக்கு பதறி அடித்து ஓடுவார்கள்

இப்பொழுது அங்கே குழப்பம், சிக்கல் நமது பழனிச்சாமி அரசுக்கு வந்தது போன்றது, 12 எம்பிக்களை தகுதி நீக்கம் செய்தது அரசு, அது செல்லாது என்றது நீதிமன்றம்.

நீதிமன்றம் இருந்தால்தானே செல்லாதது ஆகும்? என நினைத்த அரசு நீதிபதியினை சிறையில் அடைத்து எமர்ஜென்ஸி என சொல்லியாயிற்று

அதிலிருந்து மாலத்தீவு குழப்பத்தில் சிக்கிவிட்டது, பல நாட்டு மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இந்தியா இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என சொல்கின்றது

சீனா முத்துமாலை திட்டத்தில் வரும் தன் துறைமுகம் பாதுகாப்பாக இருக்கின்றதா என பார்த்துகொண்டிருக்கின்றது

அமெரிக்கா மாலத்தீவுக்கு எல்லா உதவியும் செய்ய தயார் என சொல்லியிருகின்றது, இப்படிபட்ட வாய்ப்பினை அது எப்படி விடும்?

பலநாட்டு உளவுதுறைகளும் உள்ளே புகுந்து என்னமோ செய்கின்றன‌

உலகில் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கும் விஷயம் இது, மேலதிக விவரங்கள் வரவர தெரியபடுத்தலாம்.