மாலத்தீவு குழப்பத்தை தீர்க்க இந்திய ராணுவம்?

மாலத்தீவு அரசியல் குழப்பத்தை தீர்க்க ராணுவத்தை இந்தியா அனுப்ப வேண்டும்: முன்னாள் அதிபர் வேண்டுகோள்

இந்தியா தன் ராணுவத்தை அனுப்பி அங்கு நிலமையினை சீராக்கினால் இந்தியாவின் மிகபெரும் ராஜதந்திர வெற்றியாக அது அமையும்

மோடி அரசின் வெளிநாட்டுகொள்கையில் குறிப்பிடதக்க வெற்றியாகவும் இருக்கும்

அண்டை நாடு கேட்டுகொண்டால் அல்லது கேட்டுகொள்ள வைத்து தன் ராணுவத்தை அனுப்புவது இந்தியாவிற்கு புதிதல்ல 1979 கொழும்பு ஜெவிபி கலவரம், மாலத்தீவு கலவரத்தை எல்லாம் இந்திய படைகளே அடக்கின‌

அப்படி இம்முறையும் மாலத்தீவு இந்திய உதவியினை கேட்டால் இந்தியா நிச்சயம் செல்லும்

இந்தியா புன்சிரிப்பு சிரிக்கின்றது, இந்திய ராணுவம் அங்கு சென்று அமைதியினை நிலைநிறுத்துமானால் அது மிகபெரிய வெற்றி

ஆனால் அழைத்திருப்பது முன்னாள் அதிபர், இந்நாளைய அரசு இன்னும் வாய்திறக்கவில்லை. ஆனாலும் திறமையான மத்திய அரசு என்றால் நிச்சயம் இதில் குழப்பி அடித்து தன் பிடியினை இறுக்கும்

இந்த அரசு எப்படி இதனை குழப்பி அடித்து களமிறங்கும்? இந்த அரசே மாபெரும் குழப்பத்தில் அல்லவா இருக்கின்றது?

இந்தியா தன் தென்பிராந்திய நாட்டாமை எனும் இமேஜை தக்க வைக்குமா? அல்லது இது பாஜக அரசு ஆனால் நேருவின் பஞ்சசீல கொள்கையினை மட்டும் கடைபிடிப்போம் என சொல்லுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி

எப்படியோ இந்திய உளவுதுறை ஓரளவு சாதித்திருக்கின்றது, மீதி வெற்றி மோடி கையில் இருக்கின்றது