மிகசிறந்த நடிப்புக்கு நியாயமான விருது
நடிகையர் திலகம் படத்தினை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த நடிப்புக்காக கீர்த்தி சுரேஷ் என்பவருக்கு விருது கொடுக்காவிட்டால்தான் ஆச்சரியம்
அந்த சாவித்திரியினை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் கீர்த்தி
வெகுளித்தனம் , பிடிவாதம், வெற்றி, தோல்வி , துரோகத்தின் வலி என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டி கொடுத்திருந்தார் அவர்
குறிப்பாக அந்த துரோகத்தின் உச்சத்தில் அவர் கத்தும்பொழுடு கன்னமும் உதடும் அப்படி துடித்தல்லவா? அந்த காட்சிக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும்..
சர்க்கரை வியாதி என சொன்னபின்பும் தட்டு நிறைய லட்டை வைத்துகொண்டு நளினமாக ஒரு அலட்சிய உடல்மொழியோடு விழுங்கும் அந்த ஒற்றை காட்சி போதும் ஆஸ்காரே கொடுக்கலாம்
மிகசிறந்த நடிப்புக்கு நியாயமான விருது, வாழ்த்துக்கள்
நல்ல வேளையாக ரஜினியின் பேட்டை அஜித்தின் விசுவாசம் இந்த விஜய் சூர்யாவின் இம்சை படங்களுக்கு விருது ஏதுமில்லை என்ற வகையில் விருதுக்கான கவுரவம் காக்கபட்டிருக்கின்றது.