மிகபெரிய புளுகுமூட்டை அந்த புத்தகம்
ராஜிவ் கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் புலி ஒரு புத்தகம் எழுதிவிட்டாராம், பெரும் ரகசியங்கள் உடைகின்றன என சிலர் ஒரே ஒப்பாரி
ஒரு ரகசியமும் உடையவில்லை, மாறாக திசை திருப்ப நினைக்கின்றார்கள்
புத்தகம் சொல்வது என்னவென்றால், சிவராசன் மாத்தையா தரப்பு புலியாம், பிரபாகரனுக்கு தெரியாமலே வந்து இந்திய உளவுதுறையினரை சந்தித்தானாம், பின் ராஜிவை கொன்றானாம்.
அதாவது சிவராசனை வழிநடத்தியது வெளிநாட்டு சக்தியாம்,, (பின் என்ன மண்ணாங்கட்டிக்கு சிவராசன் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை பொட்டு அம்மானுக்கு வயர்லெஸ் அனுப்பினான் என்ற கேள்வி எல்லாம் புத்தகத்தில் இல்லை)
இதை அறிந்து கொதித்த பிரபாகரன் அவன் ஈழத்திற்கு வரகூடாது என்றாராம், மாத்தையாவினை கொன்றுவிட்டாராம்
அத்தோடு அமைதியாகிவிட்டாராம், அப்படியே செத்துவிட்டாராம், உலகிற்கு தன்னை பற்றி தெரியும் என்பதால் கடைசிவரை ராஜிவ் கொலைபற்றி வாய்திறக்கவில்லையாம்
எவ்வளவு கட்டுகதைகள்?
மாத்தையா எப்பொழுது கொல்லபட்டார்? ராஜிவ் கொலைக்கு பின்புதான் கொல்லபட்டார் , ஆனால் அவருக்கும் கிட்டுவிக்குமான மோதல் அமைதிபடை காலத்திற்கு முன்பே தொடங்கி அதில் கிட்டுவின் காலும் போனது
கால் இல்லா கிட்டு சமையம் பார்த்து மாத்தையாவினை பிரபாகரனை கொல்ல பார்த்தார் என சொல்லி மொத்தமாக ஆயிரம் பேரோடு கொல்லபட்டார் மாத்தையா
மாத்தையா அன்றைய கருணா, சமாதனம் வேண்டுமென்றவர். மாத்தையா கொல்லபட்டார் கருணா தப்பிவிட்டான் அவ்வளவுதான்
சிவராசன் இந்திய உளவு அதிகாரியினை சந்தித்தானாம், இதுதான் பரபரப்பாம்
இதில் என்ன பரபரப்பு? ரா என்பது புலிகளுடன் தொடர்பில்தான் இருந்தது, ராஜிவ் கொலைக்கு முன்பு வரை பகிரங்கமாக இருந்தது, அக்கொலைக்கு பின் ரகசியமாக இருந்தது
ஏன் என்றால் உளவுதுறை அப்படித்தான்
ஆனானபட்ட கிட்டு ராஜிவ் கொல்லபடுவதற்கு 15 நாளைக்கு முன்பு வந்து ராஜிவினை வாழ்த்திய நிலையில், சிவராசனின் அதிகாரி சந்திப்பு ஒன்றும் ஆச்சரியமல்ல
சிவராசனை பிரபாகரன் கொல்ல தேடினாராம், ஆம் தடயங்களை விட்டுவிட்டு, முருகனை சிக்க வைத்து அந்த ஹரிபாபு கேமராவினை எல்லாம் தவறவிட்டு வந்த சிவராசனை பிரபாகரன் கொல்லத்தான் தேடினார்
பிரபாகரனை பொறுத்தவரையில் சிவராசன் தற்கொலை உடனே செய்திருக்க வேண்டும், அவரின் முடிவு அதுதான் ஆனால் சிவராசன் தப்பி சென்று தன் திறமையினை காட்ட நினைத்து மாட்டிகொண்டான்
சிவராசன் ஏன் பெங்களூர் சென்றான் என புத்தகம் கேட்கின்றதாம்?
வேதாரண்ய மிராசுதார் தற்கொலை, வங்ககடலில் கடும் பாதுகாப்பு என்றபின் நீர்மூழ்கி கப்பலிலா சிவராசன் தப்பிப்பான்? அவன் பெங்களூருக்குத்தான் ஓடுவான், அங்கு ஏற்கனவே நூற்றுகணக்கான புலிகளை கொண்ட முகாம் அங்கு இருந்தது, அங்குதான் தப்பினான் சிவராசன்
ராஜிவ் கொலை நடந்து 18 வருடம் மாவீரர் உரை வாசித்தான் பிரபாகரன், ஒருவார்த்தை ராஜிவ் கொலைபற்றி இல்லை, ஆனால் தடையினை நீக்கு இந்தியாவே என்ற வரிமட்டும் இருக்கும்
2002 கிளிநொச்சி மாநாட்டிலும் அது துன்பியல் சம்பவம் என சொல்லிவிட்டு நகர்ந்தவன் அவன்
ஏன் சிவராசன் உத்தமன் என்றால் அவன் சொல்லியிருக்கமாட்டானா? மாத்தையா துரோகி என்றவர்களுக்கு சிவராசனை பற்றிய மவுனம் ஏன்?
இப்படி ஏராளமான அபத்தங்களுடன், ஒரு பைசா தேறாத புத்தகத்தை பெரும் பரபரப்புடன் வெளியிடுகின்றார்களாம், இதுவும் ஒரு செய்தி என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்
மிகபெரிய புளுகுமூட்டை அந்த புத்தகம்