மிகபெரும் சர்ச்சைகளை தொடங்குகின்றார்கள்

மத கருத்துக்களை சர்ச்சையாக்கியதாக‌ கமலஹாசன் மீது உத்திர பிரதேச மாநிலத்தில் வழக்கு தொடுக்கபட்டுள்ளது : செய்தி

அதாவது இந்து பயங்கரவாதம் என ஏதோ கமல் சொல்லிவிட்டாராம்

ஆக இனி அங்கு யாராவது ஏதும் சொன்னால் தமிழகத்தில் வழக்கு தொடுங்கள் என சொல்லாமல் சொல்கின்றார்களோ?

இது மிக மிக தவறான முன்னுதாரணம், இவை எல்லாம் வன்மம் வளர்க்கும் செயல்

கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம் காவேரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம் என்றான் பாரதி, அது ஒருமைபாடு

காவேரிகரைக்காரனை கங்கைக்கு அழைத்த்து தீர்ப்பெழுதுவோம் என்கின்றார்கள் இவர்கள், இது ஒருமைபாடல்ல மாறாக வெறுமைபாடு

இனி திராவிடர்களை வடநாட்டு காவல்நிலையத்தில் காணமுடியும் என்றால் , வடக்கத்தியர்களை தமிழக காவல் நிலையத்தில் காணமுடியாதா?

ஏற்கனவே கலைஞரின் தலை, நாக்கை வெட்ட வேண்டும் என சொன்ன சாமியார்கள் எல்லாம் அங்குதான் சுற்றுகின்றார்கள்.

மிகபெரும் சர்ச்சைகளை தொடங்குகின்றார்கள்.