மிகபெரும் புயல்

இந்த 30 ஆண்டுகளில் மிகபெரும் புயல் இந்த மொசாம்பிக் நாட்டில் அடித்திருக்கின்றது

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல மிக பின் தங்கிய அந்த ஆப்ரிக்க நாடு மீளமுடியாமல்தவிக்கின்றது

புயல் வீசி 10 நாள் ஆனாலும் கொஞ்சமும் முன்னேற்றமில்லை மாபெரும் அழிவு அது

உலக நாடுகள் எல்லாம் உதவி பொருள் அனுப்புகின்றன, இந்தியாவும் கப்பல் நிறைய பொருட்கள் அனுப்பியிருக்கின்றன‌

அந்த கருப்பு தேசம் விரைவில் மீண்டெழ பிரார்த்திப்போம் ஏக்கத்திலும் சோகத்திலுமிருக்கும் அந்த ஆப்ரிக்க தேசத்து குழந்தைகளை காண மனம் ஒப்பவில்லை

விரைவில் அவர்கள் சிரிக்கட்டும்