மிக்க சொதப்பியவர் முதலில் விஜயகாந்த், இப்பொழுது ரஜினி

அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் மானம், கோபம் இவற்றை எல்லாம் உடனே களைந்து விட வேண்டும். மிக முக்கியமாக எழுத்து,பேச்சு என எல்லாவற்றிலும் வலு கவனமாக இருக்க வேண்டும்

(மற்றபடி பழிவாங்குதல், சதிதிட்டம், மிரட்டல் , உருட்டல் எல்லாம் மறைமுகமாக செய்ய வேண்டும்)

யாரையும் பொதுஇடத்தில் பேசும்பொழுதோ, எழுதும்பொழுதோ காயபடாமலோ, ஆத்திரபடவைக்காமலோ செல்வது தனிபயிற்சி

அண்ணா அதில் ஈடு இணையற்று இருந்தார், கலைஞர் அதை அப்படியே பின்பற்றினார்

ஆற்றல் அதிகம் இல்லை என்றாலும் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓகே, ஜெயலலிதாவிற்கு அரசியல் பயிற்சி கொடுத்த வகையில் தினகரனும் அதில் ஸ்கோர் செய்கின்றார்

கமலஹாசன் பேசுவது அவருக்க்கே பலமுறை கேட்டால்தான் புரியும் என்பதால் இதுவரை சிக்கல் இல்லை

ஆனால் மிக்க சொதப்பியவர் முதலில் விஜயகாந்த், இப்பொழுது ரஜினி

தூத்துகுடிக்கு சென்றுவிட்டு பேட்டி என சொதப்பி பாஜக நிலையே என் நிலைப்பாடு என்பது போல் குழப்பி அடித்து மக்கள் வெறுப்பை சம்பாதித்துவிட்டு திரும்பியிருக்கின்றார்

இதே இடத்தில் கலைஞர் இருந்திருந்தால் என்ன பேசியிருப்பார்?

“தூத்துகுடி மக்கள் என்றல்ல, யார் இறந்தாலும் அவர்களுக்காக அழுபவன் இந்த கருணாநிதி”

“கூட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்ததாக அரசு சொன்னாலும், இறந்தவர்கள் யார் மீதும் நக்சலைட் என்ற புகாரோ வழக்கோ இல்லை குற்றசாட்டோ இல்லை என்பதை சொல்லி கொள்ள விரும்புகின்றேன்”

“தமிழகத்தில் நக்சலைட் நடமாடுகின்றார்கள் என சொல்பவர் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஆனால் அப்படி நடமாடினால் ஏன் இந்த அரசை கலைக்க கூடாது என கேட்டால் பதில் வராது”

இதற்கு மேலும் பத்திரிகையாளர் துளைத்து கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா

“உங்களோடு இன்னும் அதிகமாக பேச ஆசைதான், ஆனால் தூத்துகுடியில் நக்சலைட்டுகள் ஊடுருவிய பத்திரிகை கூட்டத்தில் கருணாநிதி பதிலளித்தார் என்பார்கள், ஆக உங்கள் நற்பெயரை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது”

பத்திரிகையாளரை சந்திப்பது என்பதும், பேட்டிகள் வழங்குவது என்பதும் ஒரு கலை, அரசியலுக்கு மகா அவசியமான கலை

ஆக ரஜினியோ, அல்லது யாரோ அரசியலுக்கு வரும்முன்னால் கலைஞர் அரசியல் வாழ்வினை புரட்டிவிட்டு வந்தால் நல்லது. இனிவரும் எல்லா அரசியல்வாதிகக்கும் கலைஞரே குரு