மிக பரபரப்பாக பிரிட்டன் தேர்தல்
உலகம் மிக பரபரப்பாக பிரிட்டன் தேர்தல் முடிவினை எதிர்பார்க்கின்றது, பிரிட்டன் ஐரோப்பிய யூனியலில் இருந்து வெளியேறுதல், ஸ்காட்லாந்து சர்ச்சை, அதிகரிக்கும் தீவிரவாதம் என இன்னும் பல விவகாரங்களின் அளவுகோலாக இது பார்க்கபடுகின்றது
முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன, பிரதமர் தெரசா மே க்கு பாதகமாகவே முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன, கிட்டதட்ட தொங்கு பாராளுமன்றத்தை நோக்கி முடிவுகள் செல்கின்றன, ஜெர்மி கோர்பினுக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்கின்றார்கள்
பிரான்ஸில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி போன்று, பிரிட்டானியா மக்கள் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது, விரைவில் முழு முடிவும் தெரியவரும்
முடிவு வரட்டும் அதற்குள் அங்கிள் சைமனின் கோஷ்டிகளிடம் ஒன்றை கேட்கலாம்
பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளிகள் கிட்டதட்டா 60 பெரும், ஈழ தமிழர்கள் பலரும் களத்தில் போட்டியில் இருக்கின்றனர்
தமிழனை தமிழன் ஆள வேண்டும் மற்ற எல்லோரும் வாழவேண்டும் என்றால், ஈழ தமிழன் லண்டனில் தேர்தலில் நிற்பது ஏன்? உங்கள் கொள்கைபடி எப்படிபட்ட தவறு? உடனே அவர்களை தேர்தலில் இருந்து வெளியேற சொல்லுங்கள்
உலக நாட்டில் ஈழதமிழன் இன்னொரு நாட்டில் போட்டியிடலாம், ஆனால் ஒரே நாட்டில் பிறப்பால் வேற்றுமாநிலத்தவர் இங்கு தமிழராய் வாழ்ந்து
தேர்தலுக்கு வந்தால் அது தவறு
இப்படி அறிவார்ந்த கொள்கை உங்களிடம் இருக்கின்றது
இது எல்லாம் ஒரு பேச்சு, கொள்கை என சொல்லிகொண்டிருக்கின்றீர்கள், உங்களுக்கும் விசிலடிக்க நாலுபேர்..
பிரிட்டன் தேர்தலில் போட்டியிடும் ஈழதமிழரை, இது எங்கள் கொள்கைக்கு எதிரானது என சொல்லி எச்சரித்துவிட்டு ரஜினி பக்கம் வாருங்கள்..