மிக மிக கொடுமையான விஷயம் இது… மெல்ல மெல்ல விஷயம் பற்றி எரிகின்றது

Image may contain: 1 person

MP மாநிலத்தில் போலிஸ் தேர்வு நடந்திருக்கின்றது, இட ஒதுக்கீடு எல்லாம் உண்டல்லவா அதனால் என்ன செய்திருக்கின்றார்கள்?

தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நெஞ்சின் மீது மார்க்கர் பென்னால் எஸ்சி, எஸ்டி என எழுதி நிறுத்தி இருக்கின்றார்கள், ஆடு மாடுகளை இனவாரி பிரிப்பது போல் பிரித்து நிறுத்தியிருக்கின்றார்கள்

இவை எல்லாம் மன்னர் காலங்களிலும், சாதிகொடுமை உச்சத்தில் 
அவர்கள் கலாச்சாரம், அவர்கள் சிந்தனை இவ்வளவுதான். இப்படித்தான் அவர்களால் யோசிக்க முடியும்

மிக மிக கொடுமையான விஷயம் இது, மெல்ல மெல்ல விஷயம் பற்றி எரிகின்றது

தமிழகத்திலும் 90 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது, நீதிகட்சி, பெரியார் , திமுக எல்லாம் உருவாகி அதனை ஒழித்து இன்று ஓரளவு பாதுகாப்பும் நாகரீகமும் உள்ள மாநிலமாக இது திகழ்கின்றது

திராவிடம் என்ன செய்தது என்றால் இம்மாதிரி விஷயங்களை இங்கு கனவிலும் செய்யமுடியாத அளவு தன்மான சூழலை உருவாக்கி இருக்கின்றது, மறுக்க முடியாது

MP பக்கம் அப்படி யாரும் வரவில்லை, அந்த காட்டுமிராண்டிதனம் இன்னும் தொடர்கின்றது.

சுயமரியாதை என்றால் என்ன? எதற்காக பலர் இங்கு தன்மானம், சுயமரியாதைகாக போராடினார்கள் என்பதை நாமெலாம் விளங்கிகொள்ளும் நேரமிது