மிஸ்டர் உதயகுமார், சொல்ல முடியுமா?

Image may contain: 1 person, textஇந்த மனிதருக்கு கவலை என்ன கண்டீர்களா?

தமிழக முதல்வருக்கு தனிமனித ஒழுக்கம் மகா முக்கியமாம், நல்லது.

ஆனால் ஜெயா இருக்கும் வரை அதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், இப்பொழுது கமலஹாசன் வரும்பொழுது அது நாற்றம் என சொல்வது எப்படி?

அதற்கு முன்பு என்ன மணம் வீசியதா?

இன்றைய பிரான்ஸ் அதிபர் தன்னை விட வயதில் மிக‌ மூத்த பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனைவிகள் ஏராளம்.

ஆனானபட்ட நெப்போலியன் முதல் கென்னடி வரை தனிமனித ஒழுக்கம் உலகறிந்தது, ஆனால் அவர்களை போல செம்மையாக ஆண்டவர்கள் யாருமில்லை.

ஏதோ சாமியார் வேலைக்கு ஆள் எடுப்பது போலவும் அதில் இதெல்லாம் முக்கியம் என்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றர்.

மிஸ்டர் உதயகுமார் நீங்கள் கைகோர்த்த சீமானின் ஒழுக்கம் என்ன? சொல்ல முடியுமா?

மிக மிக மோசமாக தேவையில்லாமல் உளறும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றார் உதயகுமார், பரிதபம்.

ஏன் மிஸ்டர் உதயகுமார், ஜெயாவின் வாழ்க்கை திறந்த புத்தகம். அப்பொழுது இந்த நாற்றம் பற்றி ஏன் சொல்லவில்லை.

அப்பொழுது மூக்கு, வாய் எல்லாம் அடைத்துகொண்டு ஏன் இருந்தீர்கள்?