மிஸ்டர் சுயமோகன் , இப்பொழுது என்ன சொல்கின்றீர்?

மிஸ்டர் சுயமோகன்

இலக்கியம் என்பது பற்றி ஏதாவது 4 அல்லக்கைகளோடு நீர் பேசலாம், சில நேரம் சிங்கப்பூர் சூரியகலா போன்றவர்களோடு கும்மாங்குத்தும் போடலாம்

ஆனால் திராவிட முன்னேற்ற கழகம் பற்றி கருத்து சொல்ல உமக்கு என்ன இருக்கின்றது?

ஏற்கனவே பெரியார் புரட்சியாளர் அல்ல, கலைஞர் எழுத்த்தாளர் அல்ல, பாரதி மகாகவியே அல்ல என மகா பெரும் தீர்ப்புகளை எழுதியவர் நீங்கள்

இப்பொழுது என்ன சொல்கின்றீர்?

ராமசந்திரன் இல்லாமல் திமுக இல்லை என புலம்புகின்றீர்? என்ன ஆனது உமக்கு? தலையில் ஏதும் அடியா? இல்லை செத்துபோன சுந்தர ராமசாமி இலக்கியம் படைக்க உம்மை அழைத்தாரா?

பெரியார் போராடும் பொழுது அவர் அருகில் இருந்தது அண்ணாவும் கலைஞருமே, ராமசந்திரன் அல்ல‌

கட்சி தொடங்கும்பொழுதும் ராமசந்திரன் அப்பக்கமே இல்லை

கல்லகுடி முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும்வரை ராமசந்திரன் எதிலுமே கலந்துகொள்ளவில்லை, அவர் எந்த போராட்டத்தில் கலந்தார் ? கைதானார்?

ஆனால் சினிமாவும் ஒரு ஊடகம் எனும் வகையில் திமுக அவரை பயன்படுத்தியது, அது கட்சிக்குள்ளே சம்பத்தை வெளியேற செய்தது

சம்பத் வெளியேறினாலும் திமுக நிலைத்தது, பின் அந்நிய செலாவணி வழக்கில் இந்திராவால் மிரட்டபட்ட ராமசந்திரன் கேள்வி கேட்டார், கணக்கு கேள்வி

அவர்தான் பொருளாளர், அவரே கேள்வி கேட்டார், பிண்ணணியில் இருந்தது இந்திரா

அதன் பின் ராமசந்திரன் கட்சி தொடங்கியதும் கடைசி வரை அவர் காங்கிரஸ் அடிமையானதும், ராஜிவும் அப்படியே அதிமுகவினை வைத்திருந்ததும் அவர் செத்ததும் காட்சிகள் மாறியதும் காலம் கண்டவை

நிச்சயம் திமுகவினை அழிக்க காங்கிரசால் உருவாக்கபட்ட கோடாரி காம்புதான் ராமசந்திரன்

ஆனால் அது துரதிருஷ்டவசமாக காங்கிரசையும் தமிழகத்தில் அழித்தது, இன்றுவரை தேசியகட்சி இங்கு வளரவில்லை

மிஸ்டர் சுய்மோகம்

ஒன்று கவனித்தீரா? தேசிய கட்சிகளை எதிர்த்து களம் கண்டதுதான் திமுக, அது உடைந்தாலும் தேசிய கட்சிகள் இன்றும் இங்கு கால்பதிக்க முடியவில்லை பார்த்தீரா? அதுதான் திமுகவின் வெற்றி

பிரிந்தாலும் தன் கொள்கையில் வென்றுவிட்டது

இதனை எல்லாம் சொல்லும் நீர், கலைஞரையும் ராமசந்திரனையும் இணைக்க ஒரிசாவின் பட்நாயக் முயன்றதையும், இந்திராவின் முறைப்பில் ராமசந்திரன் அலறி அடித்து ஓடியதையும் ஏன் மறைக்கின்றீர்?

சாட்சியாக பண்ருட்டி ராமசந்தின் இங்கேதான் இருக்கின்றார்

ஆக திமுக என்பது ராமசந்திரனை நம்பி இருந்தது என்பதை விட வைகோவினை, டி.ராஜேந்தரை நம்பி இருந்தது என்றாவது சொல்லுங்கள், சிரிக்கின்றோம்

இப்படி கோபம் வரும்படி காமெடி செய்யாதீர்கள்

திமுக என்பது பிராமணல்லாதோர் கட்சியின் அரசியல் நீட்சி, கிட்டதட்ட 100 ஆண்டு பாரம்பரியமும் 50 ஆண்டுகால அரசியலும் கொண்டது.

சம்பத் சென்றார் திமுக நிலைத்தது, ராமசந்திரன் சென்றார் திமுக நிலைத்தது, வைகோ சென்றார் திமுக நிலைத்தது

அப்படி இது காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும், அதன் அஸ்திவாரம் அப்படியானது

ஒரு கலைஞர் ஓய்வெடுத்தால் பின்பு ஆயிரம் கலைஞர்கள் தலையெடுப்பார்கள், நிச்சயம் வருவார்கள்

அதனால் நீங்கள் இதனை எல்லாம் விட்டுவிட்டு, இந்த பாரதியார் என்ன கிழித்தார்? ஒன்றுமேயில்லை. சிவாஜி என்ன நடித்தார் ஒன்றுமேயில்லை, காந்தி என்ன செய்தார்? எல்லாம் சும்மா போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வுகளில் இறங்குங்கள்

எவனோ தேவதச்சன் கன்ணதாசனை விட பெரும் கவிஞர், பாரதியினை விட ஆக சிறந்தவன் என நீர் சொன்னபொழுதே உமது யோக்கியதை தெரிந்தது.

அப்படிபட்ட மிக சிறந்த ஆராய்ச்சிகளை உமது விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் வைத்துகொள்ளவும்

மீறி திமுக, ராமசந்திரன் என்றெல்லாம் கிளம்பினால் வருங்கால திமுக சும்மா இருக்காது.

நீர் எவ்வளவு பெரும் மனகுழப்பம் பிடித்தவர் என்பதை உரித்து தொங்கவிட சில நாழிகை போதும் புரிகின்றதா?