மிஸ்டர் சைமன், நீட் தேர்விற்காக நீங்கள் ஏன் குதிக்கின்றீர்கள்?

Image may contain: 5 people, people smiling, textமிஸ்டர் சைமன்,

நீட் தேர்விற்காக நீங்கள் ஏன் குதிக்கின்றீர்கள்? நீங்கள் தமிழன், தமிழனின் பெருமை அருமை எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

முப்பாட்டன் அகத்தியன் முதல், வள்ளுவன், இன்னும் ஏராளமான சித்தர்கள் எவ்வளவு மருத்துவ குறிப்புகளை சொல்லியிருக்கின்றார்கள்?

தமிழக சித்தர்கள் சொல்லாத மருத்துவமா? தமிழனிடம் இல்லா மருந்தா?

இந்த தமிழ் மருத்துவத்தைதானே வெளிநாடுகள் டெல்லி மூலம் அழிக்க ஆங்கில மருத்துவத்தை கொண்டு வந்தன‌.

இந்த மேல்நாட்டு மருத்துவத்தால் தமிழின் எவ்வளவு மருந்துகள் அழிந்தன?

பாட்டனும், முப்பாட்டனும், அப்பனும், ஆத்தாளும், அத்தாச்சியும் என்று மருத்துவமனை பக்கம் போனார்கள்? எல்லா தமிழனும் அன்று வீட்டில்தான் பிறந்து கிடந்தான்

எந்த தமிழன் அன்று மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தான்? எந்த தமிழனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது?

தமிழன் வீரத்தில் களத்தில் வேல்பட்டு புண்பட்டானேயன்றி, அவன் உடலில் மருத்துவ ஊசி குத்தபட்டதா? இல்லையே , அப்படி இல்லையே

இதனை எடுத்து சொல்ல ஒரு நாதி இல்லையே, நாதியற்ற இனமாக போய்விட்டோமே, தேசிய இனத்தின் எவ்வளவு பெரும் அவமானம் இது?

தமிழனின் பெருமைகளை மீட்டெடுக்கும் தலைவனாக, பிரபாகரனின் தம்பியாக உங்களை அல்லவா உங்கள் எளிய பிள்ளைகள் நம்பிகொண்டிருக்கின்றார்கள்?

இப்பொழுது நீங்களே அதுதான் வேண்டுமென்றால் இது தமிழனுக்கும், முப்பாட்டன்களான தமிழ் சித்தருக்கும் நீங்கள் காட்டும் துரோகம் அல்லவா?

வெளிநாட்டு பால் விஷம், வெளிநாட்டு உரம் விஷம் , வெளிநாட்டு குளிர்பானம் எல்லாம் விஷம் என உரக்க சொல்லும் நீங்கள், இப்படி வெளிநாட்டு மருத்துவத்திற்கு ஆதரவாக கொடிபிடிக்கலாமா?

நீட் யாருக்கு வேண்டும்? மான தமிழனுக்கா ? அவனிடம் இல்லா மருத்துவமா?

கிளம்புக்கள் மலைக்கு, பறியுங்கள் பச்சிலையினை, இடியுங்கள் உரலில்

குளிகை முதல் முள்ளேலி தைலம் வரை உங்கள் எளிய தமிழ்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள், அப்படி மருத்துவ புரட்சி செய்யுங்கள்

அதனை விட்டுவிட்டு இப்படி ஆங்கில மருத்துவத்திற்கு ஆதரவாக நீட் என கத்தினால் நீங்கள் எப்படி தமிழர்?

நீட்டும், மேல்நாட்டு மருத்துவமும் நாசமாய் போகட்டும்

அகத்தியர் படம் போட்டு ஒரு டீசர்ட், போகன் முதலான சித்தர் படம் போட்டு பேனர் பிடித்து தமிழ் மருத்துவம் காக்க கிளம்புங்கள்

தமிழ் மருந்து மூலம், தமிழனுக்கு மருத்துவம் செய்யுங்கள். இருப்பாய் தமிழா மூலிகையாய் என கத்துங்கள்

அப்பொழுதுதான் நீங்கள் உண்மையான தமிழர் என உலகம் நம்பும், இல்லாவிட்டால் கயல்விழி கூட நம்ப மாட்டார்.

ஆக நீர் தமிழர் என்றால் நீட் கவலையினை விட்டுவிட்டு சித்த மருந்துகளை தேடி செல்லுங்கள்.