மிஸ்டர் ரஜினிகாந்த் என்னதான் சொல்ல வராரு?
மிஸ்டர் ரஜினிகாந்த்
உங்களை சந்தித்து சீக்கிரம் கல்யாணம் செய் அப்படி ராமசந்திரன் சொன்னதாக சொல்கின்றீர்
ஆனால் உங்கள் திருமணத்திற்கு ஏன் அந்த மகானை அழைக்கவில்லை, அட திருமணம் முடிந்தபின்னும் அந்த நலம்விரும்பியிடம் நீர் ஏன் ஆசிவாங்கவில்லை?
ராகவேந்திரா மண்டபத்தின் வில்லங்கத்தை ராமசந்திரன் தீர்த்தார் என்கின்றீர், ராமசந்திரனின் காலடி அந்த மண்டபத்தில் பட்ட காட்சி ஏதும் உண்டா?
இவ்வளவு உதவி செய்த அந்த ராமசந்திரனை திரையுலகம் கொண்டாடும்பொழுது, அவர் பாக்கியராஜ், பாரதிராஜாவோடு போஸ் கொடுக்கும்பொழுது நீர் மட்டும் அங்கு இல்லையே ஏன்?
என்றாவது ராமசந்திரன் கல்லறையில் உம்மை யாரேனும் பார்த்ததுண்டா? நீர் அஞ்சலி ஏதும் செலுத்திய காட்சி உண்டா?
ராமசந்திரன் இறந்து 30 ஆண்டுகளாக இதை எல்லாம் ஏன் நீர் சொல்லவில்லை?
இந்த அங்கிள் சைமன் கட்டுகதை எல்லாம் ரசிகர் மன்ற கூட்டத்தில் சொல்லுங்கள். பொதுஇடத்தில் அதுவும் அரசியல் கூட்டத்தில் சொன்னால் தமிழ்நாடு சிரிக்காதா?
எவனோ ரஜினியினை சந்தி சிரிக்க வைக்க முடிவெடுத்திருக்கின்றான், அழகாக கோர்த்துவிட்டாயிற்று மனிதர் வசமாக சிக்கிவிட்டார் அவ்வளவுதான்
ஒருமுறை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, தான் இரட்டை இலைக்கு வோட்டு போட்ட காட்சியினை படமாகவும் வெளியிட்டார்.
அது தேர்தலுக்கு விரோதம் என்றாலும் அன்று சிக்கல் இல்லை
“ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவானாலும் காப்பாற்றமுடியாது” என சொன்ன ரஜினி அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இப்படி பல்டி அடித்திருந்தார், ஆம் இரட்டை இலைக்கே வாக்களித்தார்
கலைஞர் மட்டும் அமைதியாக சொன்னார்., “வோட்டு போடுவது இவர் விருப்பம், ஆனால் இப்படி பகிரங்கமாக காட்ட வேண்டுமா? இந்த மனிதரிடம் என்ன நம்பக தன்மை இருக்கின்றது”
மிக சரியான கணிப்பு அது
“ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைக்கவில்லை, நாங்களும் சில திட்டங்கள் வைத்திருக்கின்றோம் ” : தமிழிசை
நல்லா இருப்பீக தாயி, இதுக்காக நீங்க, எச்.ராசா எல்லாம் மேக் அப் போட்டு நடிக்க போயிராதீக, தமிழ்நாடு அழிஞ்சே போயிரும்.
வோட்டு கேட்டா போட்டு போயிருவோம், அதுக்காக இப்படி எல்லாம் பயமுறுத்தாதீக