மீத்தேன் எடுக்க விட்டால்தான் மானியம் தருவோம்

சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்கள், மீத்தேன் எடுப்பதை தடுப்பதால் மத்திய அரசு கேஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டதாம்

மீத்தேன் எடுக்கவிட்டால்தான் மானியம் தருவோம் என மிரட்டுகின்றதாம், இதுதான் காரணமாம்

மொத்த இந்தியாவிற்கும், தமிழக போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? இது எல்லாம் சீமான் கோஷ்டிகளின் அட்டகாசம்

வேண்டுமானால் இப்படி கேட்கலாம்

“ஏய் மத்திய அரசே, ரேஷன் நிதியினை நிறுத்துகின்றாயா? காவேரியினை திறந்திவிட்டு நிறுத்திகொள், எங்களுக்கு தேவையான அரிசியினை, கரும்பை நாங்களே விளைய வைக்கின்றோம்

நீரும் இல்லை, அரிசி நிதியும் தரமாட்டோம் என்றால் இது என்ன லூயி, நீரோ ஆட்சியா? அல்லது துக்ளக் ஆட்சியா?”

ஆனால் ஒரு பயலும் அப்படி கேட்கமாட்டான், டெல்லிக்கு அனுப்பிய 39 வெட்டி எம்பிக்களும் கேட்காது, ஏன் எடப்பாடி பழனிச்சாமி கூட கேட்கமாட்டார்.

மிஸ்டர் பன்னீர் அடிக்கடி பிரதமரை சந்திக்கின்றீரே, நீராவது கேட்க கூடாதா?


ஊர் கிணறுகளை தூர்வார கரூர் பள்ளபட்டி விவசாயிகள் நிதி திரட்டினர், ஆட்சியரிடம் கொடுத்து “தன்னிறைவு திட்டத்தின் கீழ்” உதவ வேண்டுகோள்.

இதுதான் உண்மையான “நமக்கு நாமே” திட்டம். இவர்களை போல எல்லா மக்களும் பொதுநலத்தோடு சிந்தித்தால் தமிழகம் நிச்சயம் மாறும்

ஆனால் கலெக்டரிடம் செல்லும் முன்னால் அந்த தொகுதி எம்.எல்.ஏ, எம்பி , பஞ்சாயத்து பிரசிடென்ட் எல்லோர் செவிட்டிலும் அம்மக்கள் ஒரு அடி அடித்துவிட்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்