மீன்கள் இதை கேட்டால் உயிரோடு வந்து சிரித்துவிட்டு செத்துபோகும்

அடையாற்றில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியா எங்கும் கடலோரங்களில் திமிங்கலம் ஒதுங்குவதும், டால்பின்கள் ஒதுங்குவதுமாகவே இருக்கின்றது

பாலி தீவில் எரிமலை வெடித்து முடித்து அடுத்த எரிமலை வெடிப்பதற்காக தயாராகின்றது, மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்ல படுகின்றார்கள்

எரிமலைகள் தரைமேல் இருக்கும் மலையில் மட்டும்தான் வெடிக்க வேண்டிய அவசியமில்லை, கடலுக்குள்ளும் சீறும் எரிமலைகள் உண்டு

ஆக என்னவோ தென்கிழக்கு ஆசிய பக்கம் நடக்கின்றது , சிலருக்கு தெரியும் சொல்லமாட்டார்கள்

ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும்வரை தேவையின்றி அஞ்சுவதில் அர்த்தமில்லை, மீன்கள் சாக ஏராளமான காரணங்கள் உண்டு எனினும் நல்ல நீரும், கடல் நீரும் கலந்ததால் மீன்கள் செத்தன என அமைச்சர சொல்வது காமெடி ரகம்

அந்த மீன்கள் இதை கேட்டால் உயிரோடு வந்து சிரித்துவிட்டு செத்துபோகும்.

ஐன்ஸ்டீன், நியூட்டன், டார்வின் உட்பட எந்த விஞ்ஞானியும் சாகவில்லை, தமிழக அமைச்சர்கள் உருவில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள், இந்த உலகம் பொறாமை காரணமாக அவர்களை கண்டு கொள்ள மறுக்கின்றது.