முகநூலில் காதல் திருமணம் என ஆசைகாட்டி மோசம் செய்யும் கோஷ்டி….
முகநூலில் அப்பெண்ணின் ஐடி மைதிலி என்றிருந்திருக்கின்றது, ஆளாளுக்கு முதலில் லைக் போட்டிருக்கின்றார்கள், பின் இன்பாக்ஸில் ஹாய் போட்டிருக்கின்றார்கள்
அந்த ஐடியோ மிக நுட்பமாக வடிகட்டியிருக்கின்றது யாரெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் சம்பாதிக்கும் பேச்சுலர் என உறுதிபடுத்தி அங்கு வலையினை வீசியிருக்கின்றது
முதலில் பழகுவது பின் படங்களை அனுப்புவது பின் பேசுவது அதன் பின் திருமணம் என பேச்சை தொடங்குவது என பெரும் நுட்பமான திட்டமெல்லாம் வைத்திருக்கின்றது அந்த ஐடி
இதில் வசமாக சிக்கி இருக்கின்றனர் தமிழக வாலிபர்கள் பலர், தமிழ் தெரிந்த காரணத்தால் ஈழ வாலிபர்களும் சிக்கி இருக்கின்றார்கள்
இப்படி காதல் திருமணம் என ஆசைகாட்டும் ஐடி சட்டென்று தனக்கு புற்றுநோய் என குண்டை தூக்கிபோடுமாம், விடுவார்களா காளையர்கள், அவர்கள் படித்து வெளிநாடு சென்று சம்பாதித்து முகநூலுக்கு வருவதே இவளை காப்பாற்ற என மனமார நம்பியிருக்கின்றார்கள் அதனால் அள்ளி கொடுத்திருக்கின்றார்கள்
அவன் முழுதும் கொடுத்துவிட்டானா? கிரெடிட் கார்டு எல்லாம் எல்லை எட்டிவிட்டதா? திவால் ஆகிவிட்டானா என உறுதிபடுத்திய பின் ஐடி கம்பி நீட்டுமாம்
இதனை முழுநேரம், பகுதி நேரம் என 11 பேர் கொண்ட குழுவோடு செய்திருகின்றது அந்த ஐடி. அந்த 11 பேரும் அம்மா, அப்பா என நடித்திருக்கின்றார்கள், அவர்களுக்கு முகநூல் ஐடி இருந்ததா? என செய்தி இல்லை
மானத்திற்கு அஞ்சி பலர் புகார் கொடுக்கவில்லை, காரணம் இப்படி ஏமாந்தவர் என தெரிந்தால் அதன் பின் யார் கட்டுவார்கள் என அஞ்சினார்களாம், இது போலி ஐடிக்கு வசதியாயிற்று
இதில் சேலம் எடப்பாடி இளைஞர் முதலில் புகார் கொடுத்தாராம், 45 லட்சம் பணமே போயிற்று இனி மானம் இருந்தால் என்ன போனால் என்ன என முடிவு செய்தார், காவல்துறையில் புகார் அளித்துவிட்டார்
செய்தி வெளிவந்ததும் , சீட்டு கம்பெனியில் ஏமாந்த கூட்டம் போல பெரும் கூட்டம் கூடி புகார் மழை கொட்டிகொண்டிருக்கின்றது
காவல்துறை களத்தில் இறங்கி, சைபர் கிரைம் எல்லாம் களமிறங்கி போலி அடியினை தூக்கினால் அது முன்னாள் நடிகையாம், பெயர் ஸ்ருதி பட்டேலாம். அந்த 11 பேர் கொண்டவர்களும் வாடகை நடிகர்களாம்
விஷயம் பற்றி எரிகின்றது,
இதற்கெல்லாம் காரணம் யாரென்றால் வெளிநாட்டு வெள்ளைகார பெண் பாவிகள், இந்த நபர்களில் ஒருவரை ஏறேடுத்து பார்த்திருந்தால் அவர்கள் ஏன் இவளிடம் ஏமாற போகின்றார்கள்?
அது இருக்கட்டும், இந்த நடிகை எவ்வளவு சாமர்த்தியமாக சம்பாதித்திருக்கின்றார்.
இப்படிபட்ட வசூல் ராணி நடிகைகளை வைத்துகொண்டு ஏன் இந்த நடிகர் சங்கம் இன்னும் கட்டடம் கட்ட நிதி இல்லை என ஊரெல்லாம் அலைகின்றது, கொஞ்சம் விவரமே இல்லாத நடிகர் சங்கம் போல
நாலு பேக் ஐடி திறந்தால் கட்டடம் என்ன? மாளிகையே கட்டலாம் என்பது அவர்களுக்கு தெரியவில்லை
இனியாவது புரியட்டும்