முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது

இந்த முகநூல் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றது என்ற சம்பவம் தொடர்கின்றது

சென்னை வாலிபருக்கும் இலங்கை பெண்ணுக்கும் முகநூலில் காதல் மலர்ந்திருக்கின்றது, அப்பெண்ணும் அவனை தேடி சென்னை வந்திருக்கின்றாள்

இருவரும் ஓர்மனம் கண்டு , ஒருவழியாகி பல இடங்களுக்கு சுற்றியிருக்கின்றார்கள்

விசா காலம் முடிவடைந்து அப்பெண் செல்லவேண்டிய நேரம் வந்திருக்கின்றது

அவளோ தாலிகட்டி இங்கே இருக்க விரும்பியிருக்கின்றாள், அதில் தவறோன்றும் சொல்ல முடியாது

இந்த பாதகன் ஏனோ இழுத்திருகின்றான் உறவுகள்தானே தொடர்கதை , உணர்வுகள் சிறுகதை என அவன் முடித்து கொள்ள அந்த அபலைபெண் தற்கொலை செய்துவிட்டாள்

விஷயம் இலங்கை தூதரகம் வழியாக வெடிக்க அந்த காதலனிடம் விசாரணை நடக்கின்றது

இந்த விஞ்ஞான வளர்ச்சியில் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆணும் பெண்ணும் எளிதில் சந்திக்கலாம் பழகலாம் அதற்காக வாழ்வின் எல்லா விஷயங்களையும் இங்கேயே தேர்ந்தெடுப்பது சரியல்ல