முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்
முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்
ஓணம் பண்டிகைக்கு கலைஞர் விடுமுறை கொடுத்ததை எல்லாம் குறிப்பிட்டு வாழ்த்திகொண்டிருக்கின்றார்
ஆனால் திமுகவின மகாபலி மன்னன் என்ன சமூக நீதியினை காத்தான், கிழித்தான்? அவன் கெட்ட கேட்டுக்கு என்ன ஓணம் பண்டிகை? அவன் நாட்டுக்கு கலைஞர் போல் என்ன செய்தான்? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார்கள்
இதை கேட்டால் தமிழக மலையாளிகள் , குறிப்பாக சென்னையில் வாழும் மலையாளிகள் என்ன நினைப்பார்கள்?
மகாபலி ஆட்சி, கலைஞர் ஆட்சியினை விட சிறந்ததா என கிளம்பும் இவர்களால் நிச்சயம் ஸ்டாலினுக்கு தலைவலியே
விரைவில் அங்கிள் சைமனை போல, ஸ்டாலினும் வீடியோவில் சித்தப்பாக்களையும், அத்தைகளையும் (அதாங்க கலைஞரின் உடன்பிறப்புக்கள்) கண்டித்து பேசபோகும் காட்சி விரைவில் வரலாம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் விவகாரங்களில் ஆழ்ந்த சிந்தனை இல்லை : ராகுல் தாக்கு
பாகிஸ்தான் விவகாரங்களில் மட்டுமா? உங்கள் அறிவு இவ்வளவுதானா ராகுல்?
கல்லணைக்கு பிறகு கட்டிய அணைகள் மீது நம்பிக்கை இல்லை – இல.கணேசன்
எது? கல்லணைக்கு பின் கட்டபட்ட அணைகள் என்றால் மோடி குஜராத்தில் கட்டிய அணைகளுமா மிஸ்டர் கணேசன்?
வெள்ளையன் கட்டிய மேட்டுருமா இல்லை நேரு கட்டிய பக்ரா நங்கலா?
மனிதர் அவர்போக்கில் சொல்லிவிட்டார்
இனி மலையாளிகள் இவர் முல்லை பெரியாரை சொல்லிவிட்டார் என கிளம்புவார்கள்
வாயில் சனி இருப்பதும் , வாயினை கொடுத்து சிக்கி கொள்பவர்களும் பாஜகவில்தான் இருக்கின்றார்கள்
ஏம்பா உபிஸ், சவுக்கு சங்கர் Shankar A ஆதாரத்தோடு உங்கள் தளபதியினையும் திமுகவினையும் அதன் அல்லக்கைகளையும் உரித்து தொங்கவிட்டு கொண்டிருக்கின்றார்
அதெல்லாம் பார்த்துவிட்டு பால்டாயில் குடிக்காமலா இருக்கின்றீர்கள்? நீங்கள்தான் மானமிக்கவர்கள் ஆயிற்றே
முகநூல் பூராவும் திமுகவுக்கு நாங்கள்தான் காவல் என சொன்னவனெல்லாம் எங்கே தொலைந்தீர்கள்??
எவனாவது அவருக்கு மீம்ஸ் போட்டீர்கள்? எவனாவது அங்கு கம்பு சுத்தினீர்கள்?
சவுக்கு சங்கர் என்றால் அப்படியே பம்மிவிடுவீர்களா? நாங்கள் எல்லாம் இளக்காரமா?
இனி இந்த பக்கம் எவனாவது திமுகன்னு வந்திங்கண்ணா, அப்புறம் இருக்கு..