முட்டாளுக்கு முட்டாளே தலைவன்
எதிரியிடம் ஒரு சொட்டு நீரும் கேட்கமாட்டேன் என சிறையில் தாகத்தால் மானத்தோடு செத்தான் சேரன் இரும்பொறை
மகன் ஒருவார்த்தை சொல்லிவிட்டான் என்பதற்காக வடக்கிருந்து உயிர்நீத்தான் மானமிக்க கோப்பெருஞ்சோழன்
நீதிதவறியபின் என்ன ஆட்சி என கண்ணகி முன்னாலே செத்தான் நெடுஞ்செழியன்
தனக்கு நிகழ்ந்த அவமானத்தின்பின் சோழநாட்டிலே கால்வைக்கவில்லை கம்பன்
மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் என குறளே எழுதினான் வள்ளுவன்
ஒன்றா இரண்டா தென்னாட்டு இனமான வரலாறு
சேரன் காலமுதல் கட்டபொம்மன் காலம் வரை, மருதுபாண்டியர் காலமுதல் வாஞ்சிநாதன் காலம் வரை, ஏன் பிரபாகரன் காலம் வரை இங்கிருக்கும் மானமும் வீரமும் என்ன?
தன்மானமும் திமிரும் என்ன?
அட வந்திருப்பது ஆண்டவன் என தெரிந்தும் அவன் முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்ற தன்மான நக்கீரன் வாழ்ந்த பூமி இது
“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ..” என என்றோ தன்மான குரல் ஒலித்த மானமிக்க பூமி இது
அப்படிபட்ட வீரமிக்க மானமிக்க இனத்துக்கு ஈரோட்டு ராம்சாமிதான் மானம் கற்று கொடுத்தானாம், சுயமரியாதை சொல்லிகொடுத்தானாம்
ராம்சாமிக்கு முன்னால் எவனுக்குமே மானமில்லையாம்
பெண் விடுதலையினை ராம்சாமி தொடங்கினானாம்
கண்ணகியும், வீரமங்கை வேலுநாச்சியாரும் வலம் வந்த மண் இது, பெண்களுக்கான பெருமை எக்காலமும் இங்கு உண்டு, இங்கு எக்காலமும் பெண்களுக்கு அதிகாரமுண்டு, கடவுளையே அம்மன் என போற்றி பெண்ணாக வணங்கும் கலாச்சாரம் இது
ஒரே நிபந்தனை அவள் நல்ல மங்கையாக இருத்தல் வேண்டும், தறுதலைகளை இந்த மண் கொண்டாட விரும்பாது
அப்படிபட்ட தர்மமிக்க மண்ணுக்கு, சிறு பெண்ணையும் தாயே என அழைக்கும் தர்மமிக்க இனத்துக்கு பெண் விடுதலையினை ராம்சாமி கொடுத்தானாம்
இந்த இனத்தின் தன்மானமும் சுயமரியாதையும் என்ன?
மானம் கெட விடுவதில்லை, கெட்டபின்பு வாழ்வதில்லை எனும் கர்வத்தின் உச்சியில் இருந்த இனம் இது
ஆகசிறந்த தன்மான, சுயமரியாதை வீரர்களை கட்டபொம்மன் புலித்தேவன் மருதுபாண்டியர் மருதநாயகம் என இங்கேதான் கண்டு வியந்திருக்கின்றான் ஆங்கிலேயன்
தமிழனின் தன்மானம் அப்படி இருந்திருக்கின்றது
நாமும் அரசியலை புரட்டுகின்றோம், 1967க்கு முன் எல்லா முதல்வருக்கும் மானம் இருந்திருக்கின்றது
மானம் கெட்ட அரசியலை தொடங்கியது அண்ணாவும் கருணாநிதியும்
அந்த மானம்கெட்ட, அறிவுகெட்ட, பணத்துக்காய் பல்லிளிக்கும் அவமான அரசியல் இன்றுவரை தொடர்கின்றது, சொல்ல தயக்கமில்லை பன்னீர்செல்வம் வரை தொடர்கின்றது
ஆக மானமும் வீரமும் சுயமரியாதையும் மிக்க ஒரு இனத்துக்கு மானம்கெட்ட அரசியலை சொல்லிகொடுத்திருக்கின்றான் ராமசாமி
ஒரு இனத்தையே மானம்கெட்ட இனமாக மாற்றியிருகின்றான்
ஆனால் இந்த அடிப்பொடிகளோ தமிழனின் வீரவரலாறை மறந்துவிட்டு மானமே இங்கு ராம்சாமி கொடுத்தது என கதையளக்கின்றார்கள்
சுயமரியாதை என்றால் என்னவென்றே தெரியாத கூட்டத்துகு சுய அறிவாவது உண்டா என்றால் நிச்சயம் இல்லை
சுய அறிவு இருந்தால் பண்டைய தமிழனின் தன்மானத்தை நினைத்து இந்த ராம்சாமியின் போலி சுயமரியாதையும் அவனையும் தூக்கி போட்டு மிதித்திருக்கும்
முட்டாளுக்கு முட்டாளே தலைவன் , அதிலொன்றும் ஆச்சரியமில்லை