முதன் முறையாக சென்னையில் இந்தியாவின் மாபெரும் ராணுவ கண்காட்சி

Image may contain: 2 people, text

இந்தியாவின் மாபெரும் ராணுவ கண்காட்சி முதன் முறையாக சென்னையில் நடக்கின்றது

இந்தியாவின் தயாரிப்புகள் முதல் உலக நாடுகள் எல்லாம் பங்குபெறும் மாபெரும் கண்காட்சி அது, அந்த கவுரவமான நிகழ்வினைத்தான் மோடி தொடங்கி வைக்க வருகின்றார்

இங்கு அன்றுதான் கருப்புகொடி காட்டுவோம் என பலர் கிளம்புகின்றார்கள்

நிச்சயம் இவர்களை போட்டு சாத்திவிட்டு மோடி கம்பீர நடை நடக்க சில நாழிகை ஆகாது, ஆனால் உலகநாடுகள் எல்லாம் பங்குபெறும் நிகழ்வில் அப்படிபட்ட சலசலபுகளை ஏற்படுத்த மோடி விரும்பவில்லை

நிச்சயம் இந்த கண்காட்சி அந்நிய சக்திகளின் கண்களை உறுத்தும், ஏதும் குழப்பம் விளைவிக்கலாமா என அவை திட்டமிடும்

பாரத பிரதமர் கண்காட்சியினை தொடங்கி வைக்க சென்றாராம், ஆனால் நாட்டுமக்கள் எல்லாம் அவரை விரட்டினார்களாம் என்ற செய்தி வருவதில் அவற்றிற்கொரு ஆனந்தம்

அவர்கள் தமிழர்களா , காவேரி என்றால் என்ன என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது, ராணுவ கண்காட்சிக்கு வந்த பிரதமர் மக்களால் மறிக்கபட்டார் எனும் செய்தி அவர்களுக்கு வேண்டும்

மோடி அரசு இச்செய்திக்கு வாய்ப்பளிக்காமல் நிதானமாக நடக்கின்றது, கூடுமானவரை தமிழக அழிச்சாட்டியங்களை தவிர்க்கும் விதமாக அவர் பயணதிட்டம் இருக்கின்றது

இது நிச்சயமாக அச்சம் அல்ல, மாறாக சர்ச்சைகளை இக்கண்காட்சி நேரம் தவிர்ப்பது

மற்றபடி இந்த தமிழக அழிச்சாட்டிய மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல.

கவனியுங்கள் இன்று கருப்புகொடி பிடிப்பவன் , மோடி வந்தால் திரும்ப முடியாது என சொல்பவன் எல்லாம் அன்று மிசாவில் கதற கதற முதுகிலும் வாயிலும் வாங்கியவன்

வாழ்விலும் மறக்கமுடியா அடி அன்று வாங்கினார்கள், அதில்தான் இந்திரா மகனை சிதறடித்தார்களா என்ற வாதம் இன்றும் உண்டு

மிசா காலம் போல‌ இப்பொழுதும் தூக்கி போட்டு சாத்த சில நொடி ஆகாது, டெல்லியால் முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.

அப்படி சாத்தினால் என்ன செய்வார்கள்?

அன்று இந்திரா அடிக்கும்பொழுது என்ன செய்தார்களோ, அதனைத்தான் இப்பொழுதும் செய்வார்கள். ஆம் நன்றாக வாங்குவார்கள்

அதனை தாண்டி என்ன செய்துவிட முடியுமென்றால், இதுவரை ஒன்றும் செய்யவில்லை செய்யவும் முடியாது என்பதே தமிழக வரலாறு காட்டிய விஷயம்

ஆனால் வீண் சர்ச்சைகளை கடந்து செல்கின்றார் மோடி. அவ்வகையில் வாழ்த்துக்கள்

“இந்தியர்களுக்கு என்ன செய்ய தெரியும்? அவர்கள் உற்பத்தி எல்லாம் தரமில்லா குப்பை, சுதந்திரம் பெற்றாலும் நாங்களின்றி அவர்கள் என்ன செய்யமுடியும்?” என்றவர் பிரிட்டனின் சர்ச்சில்

இன்று அதே பிரிட்டன் இன்று இந்தியா நடத்தும் ராணுவ கண்காட்சியில் பங்குபெறுகின்றது

நிச்சயம் இது இந்தியாவின் வெற்றி, மாபெரும் வெற்றி

தேசத்தின் மிகபெரும் கவுரவமான அந்த ராணுவ கண்காட்சி மாபெரும் வெற்றி அடையட்டும், தேச பெருமை உயர்ந்து நிற்கட்டும்