முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

பிரிட்டனில் இலங்கை தமிழ்பெண் மேயராக தேர்வு : செய்தி.

இது என்ன அநியாயம்?

பிரிட்டனுக்கு யாரும் வரலாம் வாழலாம், ஆனால் ஆளும் உரிமை பிரிட்டானியருக்குத்தானே உண்டு? இதுதானே தமிழ் தேசிய சித்தாந்தம்

இதை எப்படி அனுமதிக்கலாம்

உடனே தமிழ்தேசிய வாதிகளும், பாரதிராஜா கோஷ்டியும் அப்பெண்ணை பதவிவிலக கோர வேண்டும்

தமிழனை தமிழன் ஆளட்டும், பிரிட்டனை பிரிட்டானியர் ஆளட்டும்.


முதல்வர் பதவி விலகும்வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் தி.மு.க. பங்கேற்காது – மு.க.ஸ்டாலின்

ஆட்சியினை கவிழ்க்கும் வித்தை தெரியாது, வேறு தெரிவுகளும் யோசிக்கும் மனநிலையும் இல்லை

பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டப்பேரவை பக்கம் வரமாட்டோம் எனபதெல்லாம் பழனிச்சாமிக்கு மிக பெரும் நிம்மதியினை மட்டுமே கொடுக்கும்

அதற்குத்தான் ஆசைபடுகின்றார் ஸ்டாலின்.

பழனிச்சாமிக்கு இதை விட பெரும் சந்தோஷம் என்ன இருக்க முடியும்?


தமிழகத்தில் 1970 முதல் தமிழர் அல்லா முதல்வர்கள் ஆளும்பொழுது நடக்காத பெரும் துப்பாக்கி சூடு பச்சை தமிழன் ஆட்சியில் நடந்திருக்கின்றது

தமிழனை தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும் என்ற சைமன், பாரதிராஜா கோஷ்டி இப்பொழுது அமைதியான காரணம் இதுதான்

தமிழனுக்கு தமிழர் அல்லாத முதலமைச்சரே பலவிதங்களில் பாதுகாப்பு, சுட்டால் நம்மை தமிழர் அல்லாதவர் என சொல்லிவிடுவார்களோ என சுடுவதற்கே யோசிப்பார்கள்

ஆக இனி தமிழ்நாட்டை தமிழன் அல்லாதோரே ஆளவேண்டும், தமிழர் ஆண்டால் பெரும் கொடூரமாக சுடுகின்றார்கள்


பெட்ரோல் டீசல் விலையினை ஒரே இரவில் குறைக்க முடியாது : அமைச்சர் தர்மேந்தர்

ஆனால் விலையினை உயர்த்துவதை மட்டும் ஒரே நொடியில் உயர்த்துவார்கள், அது பற்றி எல்லாம் நாம் கேட்டால் தேசதுரோகி