முத்தலாக்

பெரியாரிய கொள்கைகளுக்காக பாராளுமன்றம் சென்ற தமிழக சிங்கம் எதுவும் முத்தலாக் விஷயத்தில் பெரும் வரவேற்பினை செய்ததாக தெரியவில்லை

திடீரென மனைவியினை நோக்கி தலாக் என சொல்லி விரட்டினால் அவள் என்ன செய்வாள்? எப்படி வாழ்வாள்?

ஒரே நொடியில் பெண்களின் வாழ்க்கையினை நிர்கதி ஆக்கிவிடும் விவகாரமது

முத்தலாக் என்பது இந்துக்களின் பொட்டுகட்டி விடும் சடங்கினை போல மகா கொடுமையானது

அந்த சம்பிரதாயத்தை வேறறுத்தது திராவிட சித்தாந்தம் என முழங்கியவர்கள் முத்தலாக் பற்றி முணுமுணுப்பதோடு சரி

அவர்களை விடுங்கள் , பெண் விடுதலை காக்க வந்த தலித்திய திருமா கோஷ்டியும் மகா அமைதி

ஏன்?

அந்த காயிதே மில்லத் போன்றவர்கள் கலைஞர் கையினை பற்றி “தமிழக இஸ்லாமியருக்கு ஒரே அடைக்கலமும் நம்பிக்கையும் நீங்கள்” என உருகியதாக இருக்கலாம்

நேற்று பாராளுமன்றத்தில் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் இயற்றபட்டபொழுது திராவிட போர்வாள் வைகோ என்பவர் வாயில் பிளாஸ்திரி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன‌

அன்னார் கத்தார், துபாய்,குவைத் எல்லாம் சென்று திராவிட கூட்டங்களை நடத்தியவர் என்பது கூடுதல் தகவல்