முத்தலாக் ஒன்றும் ஒரு நொடிக்குள் சொல்லி….
முத்தலாக் ஒன்றும் ஒரு நொடிக்குள் சொல்லி உடனே விவாகரத்து வழங்கும் விஷயம் அல்ல. அதற்கும் கால இடைவெளி உண்டு
மூன்று தலாக்குகளுக்கு இடையில் இஸ்லாமிய முறைபடி சில மாத இடைவெளிகள் வேண்டும், அப்பெண் கருவுற்றாளா? அதன் எதிர்காலம் என்ன? இவர்கள் இந்த இடைவெளியில் இணைய வாய்ப்பு உள்ளதா என பல விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டும்
இன்றைய இந்திய நீதிமன்றங்களும் இதனைத்தான் சொல்கின்றன, கேட்டவுடன் விவாகரத்து யாருக்கும் கிடைப்பதில்லை கிட்டதட்ட 1 வருடம் இழுத்தடித்து இனி வாய்ப்பே இல்லை என்றபின்புதான் வழங்கபடுகின்றது
இரு விஷயங்களும் ஏறகுறைய ஒன்றுதான்
மனங்கள் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை, விவாகரத்து பெறாமலே பிரிந்து வாழ்வோரும் உண்டு, சட்டம் பிரித்தாலும் அதனை தூக்கிபோட்டுவிட்டு சேர்ந்து வாழ்வோரும் உண்டு
மணவாழ்வு என்பது மனங்களை பொறுத்தது, சட்டங்களை பொறுத்தது அல்ல
இப்பொழுது ” என்ன? தலாக் சொல்லி உன்னை வேண்டாம் என்கின்றானா? நாங்கள் விடமாட்டோம்..” என இந்திய அரசு சட்டம் இயற்றுகின்றதாம்
ஆனால் மனைவியினை விரட்டிவிட்டு இன்னொரு திருமணம் செய்த நடிகர்கள் (பிரகாஷ் ராஜ் எல்லாம் நினைவுக்கு வர கூடாது) , சுனந்த புஷ்கர் வழக்கில் சிக்கிய சசி தரூர் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?
இஸ்லாமிய பெண்களை காக்க வந்திருக்கின்றோம் என கிளம்புவர்கள், இந்து பெண்களின் பாதிப்புக்கு என்ன சட்டம் வைத்திருக்கின்றார்கள்?
ஜெமினி கணேசனை தொட்டார்களா? இல்லை கமலஹாசன் போன்றோரை நெருங்கத்தான் முடியுமா?
பாதிக்கபட்ட இந்து பெண்களுக்கு என்னதான் பாதுகாப்பு? மோடி கூட ஒரு பெண்ணை பிரிந்துவிட்டார் என்ற செய்தி உண்டு. அப்பெண்ணுக்கு என்ன நீதி?
அக்கா தமிழிசை மருத்துவராக போயிவிட்டார், அவர் மட்டும் வழக்கறிஞராக இருந்தால் நடப்பதே வேறு
மதம் சார்ந்த பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது : திருமா
இந்த இந்து ஆலயங்களை இடித்துவிட்டு பவுத்த விகாரை கட்டவேண்டும் என இதே வாய்தானே சொன்னது திருமா சார்?
அடங்க மாட்டோம், அத்து மீறுவோம் , திருப்பி அடிப்போம், திருப்பி போட்டும் அடிப்போம்