முன்னாள் புலி கருணாவின் குரல்
கோத்தபாய ஆட்சிக்கு வந்ததும் ஒரு குரல் உரக்க கேட்கின்றது அது முன்னாள் புலி கருணாவின் குரல்
பிரபாகரனின் மெய்காப்பாளனாக இருந்து பின் பிரபாகரனிடம் இருந்து உயிர்தப்பிக்க கோத்தபாயாவிடம் சரணடைந்த அந்த கருணாவின் குரல்
அன்னார் மிக பகிரங்கமாக பிரபாகரன் மரணம் அடைந்தது உண்மை, அதனால் அவருக்கு வீரமரணம் என அஞ்சலி செலுத்துவதுதான் சரி என பேசிவிட்டார்
இன்னும் ஒருவாரத்தில் மாவீரர் தினம் வரும் நிலையில் மனிதர் இப்படி பேசுவது எல்லாம் அலரி மாளிகையில் கோத்தபாய காலடி எடுத்து வைத்த முகூர்த்தம்
ஆக அங்கிள் சைமனுக்கும் வைகோவுக்கும் இன்னும் சிலருக்கும் தமிழின துரோகி ஒருவர் கிடைத்துவிட்டார் , இனி பாருங்கள் பிரபாகரனை விட்டுவிட்டு கருணாவுக்கு அஞ்சலி செலுத்த கிளம்புவார்கள்