முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் யாழ்பாணத்தில் பேட்டி
மிக உக்கிரமான தாக்குதலில் உயிர்தப்பிய ஒருவரை 30 ஆண்டுகள் கழித்து அந்த இடத்திற்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் , அப்படி ஒரு நினைவில் பேட்டி கொடுத்திருக்கின்றார் முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங்
அதாவது 1987ல் இலங்கைக்கு என்ற அமைதிபடை மேஜர் அவர், 32 மாதம் அங்கிருந்திருக்கின்றார். சமீபத்தில் யாழ்பாணம் சென்று பேட்டி கொடுத்திருக்கின்றார்
இந்த இடத்திற்கு உயிரோடு வருவேன் என நினைக்கவேயில்லை என்று அவரின் பேட்டி தொடங்குகின்றது.
அவர் பேட்டியின் சுருக்கம் இதுதான்
“இந்திய ராணுவம் யுத்தம் நடத்த செல்லவே இல்லை. இந்திய ராணுவத்தை இலங்கை எதிர்க்காது என்பதால் அவர்களும் அமைதி, போதுமான வெடிமருந்தோ தகவல் தொடர்பு கருவிகளோ நாங்கள் கொண்டு செல்லவில்லை.
உண்மையினை சொல்லவேண்டுமென்றால் யாழ்பாணம் அன்றே வசதியாக இருந்தது, எங்கள் நாட்டில் கிடைக்காத மின்னணு பொருள் எல்லாம் கிடைத்தன, அதனை வாங்க வந்த உல்லாச பயணம் போலவே இருந்தது
யாழ்பாணம் பற்றிய மேப் கூட எங்களிடம் கிடையாது, அப்படித்தான் சென்றிருந்தோம்.
புலிகளுக்கும் எங்களுக்கும் தொடக்க காலம் நன்றாக இருந்தது, எங்கள் முகாம்களுக்கு எல்லாம்அடிக்கடி வந்து எங்கள் ஆயுதம் எல்லாம் பார்ப்பார்கள், நாங்கள் அவர்களை நம்பினோம்
அவர்கள் வந்தது உறவு பாராட்ட அல்ல, மாறாக ஆயுதங்களை நோட்டமிட என்பது பின்னர்தான் புரிந்தது, நம்ப வைத்து கழுத்தறுத்தனர்
நாங்கள் பதிலுக்கு தாக்கமுடியா வண்ணம் மக்கள் கூட்டத்தில் புகுந்துகொள்வர், நாங்கள் திருப்பி தாக்கியிருந்தால் ஒன்றும் மிஞ்சியிருக்காது.
ஒரு விஷயம் சொல்லவேண்டும், எங்களை விட அதி நவீன ஆயுதங்கள் அவர்களிடம் இருந்தன, முழுக்க அது அந்நிய நாட்டு தயாரிப்பு. எப்படி அவர்களுக்கு அம்மாதிரி ஆயுதங்கள் கிடைத்தன என தெரியவில்லை
மிக மிக மோசமான வகைகளில் எல்லாம் எங்களை தாக்கினர், 1200 வீரர்கள் அப்படி எதிர்பாரா நேரத்து தாக்குதலில் செத்தனர், நேருக்கு நேர் புலிகள் மோதியது இல்லை
நாங்கள் பயிற்சியளித்த புலிகள் எங்களையே தாக்குவதை நம்பவே எங்களுக்கு சில மாதமானது அப்படி ஒரு அதிர்ச்சி
என் சகாக்களை கூட நான் இழந்தேன், இன்னும் பலரை இழந்தேன், புலிகள் எங்களுடன் மோதியிருக்க கூடாது
யுத்த தயாரிப்போடு எங்களை அனுப்பியிருந்தால் நடந்திருப்பதே வேறு, ஆனால் ஒரு தயாரிப்புமின்றி, அவர்கள் எதிர்க்க மாட்டார்கள் என நம்பி சென்றதே எமது ராணுவ இழப்பிற்கு காரணம்”
இப்படி நினைவு கூர்ந்திருக்கின்றார் மேஜர்
படத்தில் அவர் காணும் காட்சி என்ன தெரியுமா?
இந்த இடத்தில்தான் புலிகள் பரப்பிவிட்ட தவறான தகவலை நம்பி இந்திய படை களமிறங்கியது, சூழ்ந்து நின்று புலிகள் சுட்டதில் 200 வீரர்கள் செத்தனர்
அவர்கள் உடலை மிக மிக அவமரியாதையாக ஒப்படைத்தனர் புலிகள்
அந்த இடம் எந்த இந்திய ராணுவ வீரனும் மறக்க கூடிய இடமல்ல
உண்மையில் மேஜர் அங்கு வீரவணக்கம் செலுத்துகின்றார், அவரோடு கூட நாமும் செலுத்தலாம்
அந்த 1200 வீரர்களுக்கு சென்னை மெரீனாவில் ஒரு நினைவிடம் கட்டியே தீரவேண்டும், அவர்கள் தியாக அடையாளம் நிலைபெற வேண்டும்.