முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள்

Image may contain: 1 person, text

உலகெல்லாம் வாழும் முருக பக்தர்கள் இன்று தை பூசத்தை கொண்டாடுகின்றார்கள்

நட்சத்திர மண்டலத்தின் 8ம் நட்சத்திரமான பூசம், தைமாதத்தில் பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் தைபூசம் கொண்டாடபடும்

முருகனுக்கு உகந்த நட்சத்திரங்களில் பூசமும் ஒன்று. இந்நாளில்தான் அன்னை பார்வதி அசுரரை அழிக்க முருகனுக்கு வேல் கொடுத்தார் என்கின்றது புராணம்

இந்நாளுக்காக மார்கழி மாதமே முருக பக்தர்கள் விரதம் ஆரம்பிப்பார்கள், அது துளசி விரதம் என அழைக்கபடும். நாளெல்லாம் கந்த சஷ்டி கவசம் எல்லாம் பாடி அவரை தொழுவார்கள், இந்த தைபூசத்தன்று அது பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற கொண்டாட்டங்களோடு அது கொண்டாடபட்டு நிறைவுபெறும்

இக்காலகட்டம் பலருக்கு விரதம் நிறைவுபெறும் நேரம்

இந்த மார்கழி நோன்பு என்பது மார்கழி மாதம் முழுவதும் நோற்பது என்பது இக்கால நடைமுறை. ஆனால் ஆண்டாள் பாடல் என்ன சொல்கின்றதென்றால் மார்கழி திங்கள் மதிநிறை நன்னாளாம் என்றுதான் விரதத்தை பற்றி சொல்கின்றது

அதாவது மார்கழி பவுர்ணமியில் தொடங்கும் விரதம், பின் தைமாத பவுர்ணமியில் நிறைவுபெறும். அக்காலம் இப்படித்தான் இருந்தது என்கின்றார்கள்

இதற்கு மேல் ஆண்டாள் விரதம் பற்றி தெரியவேண்டுமென்றால் வைரமுத்துவிடம் கேட்டுகொள்ளலாம்

ஆக எல்லா தரப்பும் விரதம் இருந்து முடிக்கும் புனிதமான நாள் இந்த தைபூசம். முருக பெருமான் பக்தர்களுக்கு மிக மிக உச்ச கொண்டாட்டமான நாள்

அப்படி தமிழகத்து அறுபடை வீடுகள் முதல் மலேசிய பத்துமலை போன்ற அயல்நாடுகளிலும் வெகு விமரிசையாக தைபூசம் கொண்டபட்டுகொண்டிருக்கின்றது

அந்த பக்தர்களுக்கு வாழ்த்துக்கள், தமிழரின் தனிபெரும் கடவுளான முருகபெருமான் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்