முளையில் அல்ல, விதையிலே நசுக்க வேண்டும்

இந்து அமைப்பு தலைவர்களை கொல்ல திட்டம் தீட்டியதாக பலர் கைது செய்யபட்டிருக்கின்றனர்

தமிழகம் ஒன்றும் பாதுகாப்பான மாநிலம் அல்ல‌

ராஜிவ் கொலை இங்குதான் நடந்தது, அத்வாணி இங்குதான் மயிரிழையில் உயிர்தப்பினார்

ராஜகோபாலன் என்ற இந்து அமைப்பு நபரின் கொலை எல்லாம் இங்குதான் நடந்தது

ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு, மணிரத்னம் வீட்டில் குண்டுவெடிப்பு என பல விஷயங்கள் நடந்தன‌

இமாம் அலி போன்றவர்கள் கொடூர தீவிரவாதி ஆனதும், பெங்களூர் வரை சென்று கடும் போராட்டத்திற்கு பின் அவன் கொல்லபட்டதும் வரலாறு

கோவை குண்டுவெடிப்புகள் , கலவரங்கள் என்றும் நீங்கா ரணம்

இம்மாதிரி செய்திகளை வெற்று விளம்பரம், திசை திருப்பல் என கடந்து செல்லமுடியாது, இரும்புகரம் கொண்டு ஒடுக்கி இவற்றை முளையில் அல்ல, விதையிலே நசுக்க வேண்டும்