மூன்று இந்திய ரணுவ நடவடிக்கைகள்….
அன்று ராணுவ தளபதியாக சுந்தர்ஜி எனும் தமிழர் இருந்த நேரம், பொற்கோவில் ஆப்பரேஷன் எல்லாம் செய்தவர்
சுந்தஜி ஒரு தமிழர் என்பது கூடுதல் விஷயம், அவர் தளபதியாக பொறுப்பேற்றதும் ராணுவத்தின் தரத்தினை உயர்த்தி அதனை பெரும் சக்தியாக்க விரும்பினார்
இராணுவ பலத்தை உயர்த்துவது மட்டுமல்ல, அந்தப் பலத்தை போரில் பரிசீலித்துப் பார்ப்பதற்கும் சுந்தர்ஜிக்கு ஆர்வம் அதிகம்.
மூன்று இராணுவ நடவடிக்கைகளுக்கு சுந்தர்ஜி திட்டங்களை வகுத்தங்களை வகுத்திருந்தார்.
மூன்று இராணுவ நடவடிக்கைகளும் மூன்று நாடுகளுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டன.
முதலாவது திட்டம் பாகிஸ்தானுக்கு எதிரானது, அதற்கு ‘பிராஸ் ராக்ஸ்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
இரண்டாவது திட்டம் மக்கள் சீனக் குடியரசுக்கு எதிரானது. ‘செக்கர் போர்ட்;’ என்று அதற்கு பெயர் சூட்டப்பட்டது.
மூன்றாவது திட்டம் ஒரு குட்டி நாட்டுக்கு எதிரானது. அந்த நாடு இலங்கை.,இலங்கை மீதான இராணுவ நடவடிக்கைத் திட்டத்துக்கு ‘திரிஷிக்தி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
இது போக இன்னொரு நாட்டின் மீதும் குறிவைக்கபட்டது, அது மாலத்தீவு. அந்நாளில் அது நட்புநாடாக இருந்தாலும் அங்கு இந்திய ராணுவம் எவ்வளவு நேரத்தில் சென்று இறங்கும் என்ற சோதனை விஷயத்தினை தெரிந்துகொள்ள சுந்தர்ஜி விரும்பினார்
எல்லா துறைகளும் திட்டமிட்டன, அதில் உளவுதுறைகளும் அடக்கம்
இலங்கையும் மாலத்தீவும் தங்கள் காலடியில் ஓடிவந்து விழவேண்டும் என திட்டமிட்டன, அப்படி இலங்கை வந்து விழுந்து அமைதிபடை அனுப்பியாயிற்று
மாலத்தீவு எப்படி வரும்? சும்மா இருந்தால் எப்படி இறங்க ஏதும் சிக்கல் வேண்டுமல்லவா? அதனால் ஈழபோராளிகளுடன் இருந்த தொடர்பினை பயன்படுத்த விரும்பியது
அதில் உமா மகேஸ்வரன் சிக்கினார் அல்லது முன்வந்தார், அவருக்கு இந்தியாவில் இருந்து ஆயுதங்களை கடத்துவதும் தளம் அமைப்பதும் சிக்கலாக இருந்தது, மாலத்தீவில் ஒரு தளம் இருப்பின் மிக வசதி என கண்டார்
உமா மகேஸ்வரன் சாதாரணம் அல்ல, லெபனானில் பயிற்சிபெற்ற போராளி, ஈழத்தில் ராணுவத்திற்கெதிராக முதலில் தாக்கியது அவர்தான், பிரபாகரன் அவருடன் ஓடிவந்து சேர்ந்தான், பிரபாகரனின் கிறுக்குதனம் பிடிக்காமல் இருவரும் பாண்டிபஜாரில் சுட்டுகொண்டது வேறு விஷயம்
அப்பொழுது இந்தியாவால் காப்பாற்றபட்டனர் இருவரும்
மாலத்தீவினை பிளாட் இயக்கம் பிடிப்பதாகவும், அங்கு இந்தியபடை வந்து பேச்சு நடத்துவதாகவும் இன்னபிற மறைமுக ஒப்பந்தமும் இருப்பதாகவும் சில செய்திகள் கசிந்தன
ஆனால் எப்பொழுது செல்லவேண்டும் என குறித்துகொடுத்த நேரத்திற்கு முன்பாக உமா மகேஸ்வரன் படை குதிக்க, எல்லாம் குழம்பிற்று. மாலத்தீவு சுதாரித்தது இந்திய படை கலவரம் அடக்கசென்றோம் என சொல்லிவிட்டு போராளிகளை விரட்டி அடித்தது
அத்தோடு இருந்தாலும் பரவாயில்லை, மாலத்தீவிற்கு ஆபத்தென்றால் விடமாட்டோம் என சொல்லி நாம் நண்பர்கள் என சொல்லிவிட்டு வந்துவிட்டது
இந்திய ராணுவம் தன் நோக்கத்தை நிறைவேற்றிற்று, ஆனால் தான் ஏமாற்றபட்டதாக சீறிகொண்டிருந்தார் உமா
ராஜிவ் மீது கொலைவெறியில் அலைந்தார், அவரின் குழந்தைகளை கடத்தும் அளவிற்கு வெறிகொண்டு அலைந்தார்
மாலத்தீவு அரசும் சும்மா அல்ல, எல்லாவற்றையும் புரிந்துகொண்டது ஆனால் இந்தியாவினை பகைக்காமல் கவனித்துகொண்டே இருந்தது
இந்நிலையில்தான் இலங்கையில் உமா சுடபட்டு மாலத்தீவு அலுவலகம் அருகில் வீசபட்டார், மாலத்தீவு உளவுதுறை அதனை செய்ததாக தகவல்கள் கசியவிடபட்டன
மாலத்தீவிடம் யார் வாலாட்டினாலும் நாங்கள் விடமாட்டோம் என நம்பிக்கை அளித்தது இந்தியா
இதுதான் உலக அரசியல், இங்கு அவரவர் நலம் அவருக்கு முக்கியம். கிடைக்கும் விஷயங்களை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திகொள்வதுதான் புத்திசாலிதனம்
இந்தியா செய்ததில் பல விஷயங்கள் சர்ச்சையாக இருக்கலாம், ஆனால் எல்லா நாடுகளும் இதனை விட மகா மோசமான காரியங்களை செய்து நாட்டை பாதுகாக்கின்றன
பாதுகாப்பு விஷயம் அப்படித்தான்
இப்பொழுது மாலத்தீவில் சீனா பிடி இறக்கும் நிலையில் இந்தியா எப்படி தன் நலன்களை காத்துகொண்டிருக்கின்றது என்பது பற்றி தகவல் இல்லை
மோடியும் டிரம்பும் போனில் பேசிகொண்டதாக செய்திகள் வருகின்றன, நிச்சயம் ஏதோ நடக்கின்றது. அது நடப்பதை பொறுத்து உலகிற்கு தெரியும்
இந்தியா அவ்வளவு எளிதில் விடாது என்பது மட்டும் புரிகின்றது.