ஆர்.எஸ்.எஸ் எப்போது உதித்தது ….
ஆர்.எஸ்.எஸ் எப்பொழுது உதித்தது? ஐரோப்பாவில் ஹிட்லரும் முசோலினி யும் வெறிபிடித்த இயக்கங்களை உருவாக்கியபொழுது அதே பாணியில் இங்கு உருவான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்
அன்றிலிருந்தே அதன் மீது சர்ச்சைகள் ஏராளம், அதன் நிதிமூலம் என்ன? எங்கிருந்து யார் அனுப்புகின்றார்கள் என்பதெல்லாம் பரம ரகசியமானவை
கிறிஸ்தவ, இஸ்லாமிய இயக்கங்களுக்கு அந்நிய நிதி வருகின்றது அது அந்நிய சதி என ஒப்பாரி வைப்பவர்கள் எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வரும் பணம் , வந்த பணம் பற்றி பேசமாட்டார்கள்
ஹிட்லரின் நாசி கட்சியில் இருந்து கூட ஆரியத்தை வளர்த்தெடுக்க அவர்களுக்கு பணம் வந்ததாக அக்கால சர்ச்சைகள் எல்லாம் உண்டு
India Development and Relief Fund என்ற நிறுவனம் அமெரிக்கா ஜெர்மனிய நாடுகளில் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் CISCO என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத் திடமிருந்தும் மேலும் பல நிறுவனங்களிட மிருந்தும் நிதி திரட்டி யதற்கான ஆதரங்கள் வெளியாகின.
இன்றுவரை ஆர்.எஸ்.எஸ் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளை பெரிதாக எதிர்க்காத மர்மமும் உண்டு. இந்திரா, ராஜிவ் எல்லாம் கடுமையாக எதிர்த்த அளவு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை எதிர்க்காது, கூர்ந்து கவனித்தால் புரியும்
தேசபற்று எனும் பெயரில் பெரும் அடாவடிகளை செய்த, அரசுகளை உருவாக்கி மிரட்டிய அந்த ஐரோப்பிய அடாவடி இயக்களை பார்த்து உருவான ஆர்.எஸ்.எஸ் எப்படி இருக்கும்? அதன் திட்டம் எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
தங்கள் உறுப்பினரான நரேந்திர மோடி என்பவரைத்தான் இன்று பிரதமராக்கி வைத்து மறைமுகமாக ஆள்கின்றது ஆர்.எஸ்.எஸ். என்றுமில்லா சர்ச்சைகளும் நெருக்கடிகளும் இன்று வர அதுதான் காரணம்
மிரட்டுதல், வம்பு செய்தல் , ஒருமாதிரி யான அடாவடியில் ஈடுபடுதல் போன்ற வையே இம்மாதிரி இயக்கங்களின் செயல், தமிழகத்தில் என்ன நடக்கின்றது எச். ராசா போன்றவர்கள் திடீரென பேசும் பேச்சை கேட்டாலே இவர்கள் கொள்கை புரியும்
“எந்த படுகொலையும் செய், யார் எதிர்த்து கேட்டாலும் கொல், யாரையும் பேசவிடாதே, உரிமைகளை அவர்களின் சடலங்களோடு புதை, இக்கொடுமை களை எல்லாம் #நாட்டுபற்று எனும் ஒற்றை வரியில் சமாளித்துவிடலாம்” என்பது நாஜி கொள்கையின் கோட்பாடு, முசோலியின் சேனையின் கோட்பாடும் அதுவே
இங்கு நாட்டுபற்று எனும் பெயரில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்கின்றது என கவனித்துபார்த்தால் புரியும், கிட்டதட்ட இதே சாயல்தான்.
ஐரோப்பா அம்மாதிரி அடாவடி இயக்கங்களை ஒழித்துகட்டிவிட்டது, காரணம் அந்த இயக்கங்களால் நேர்ந்துவிட்ட அழிவு , கொடூர அழிவு அவர்கள் கண்முன்னால் நிற்கின்றது
அந்த சர்ச்சைகுள்ளான இயக்கம்தான் இன்று அதற்கும் சிலர் வால்பிடிக்கி ன்றார்கள்
ஆர்.எஸ்.எஸ் என்ன சாதித்தது என்றால் காந்தி கொலை போன்ற சில விஷயம், பல கலவரம் தவிர ஒன்றுமில்லை
இந்தியாவிலும் அந்நிலை வரவேண்டும் என பலர் வீராவேசம் கொண்டு திரிகின்றனர் அவ்வளவுதான் விஷயம்.
இந்த நாட்டிற்கு ஆபத்தான இயக்கம் என 4 முறை தடைசெய்ய பட்ட இயக்கத்திற்குதான் இத்தனை ஆர்ப்பாட்டம், பின் எங்கிருந்து தேசம் உருப்படும்?
ஆர்.எஸ்.எஸ் பற்றி ஏதும் சொன்னால் , நேருவே எங்களை பாராடினார் தெரியுமா? என பெருமை அடைகின்றார்கள்
ஆக அந்த பெருமகனின் அங்கீகாரத்திற்காக ஏங்கி கிடந்த அமைப்பா நீங்கள்? பின்னர் ஏன் நேருவினை விமர்சிக்கின்றீர்கள் என்றால் சத்தமே இல்லை
ஆர்.எஸ்.எஸ் என்பது ஏதோ இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரை வீழ்த்திய செஞ்சேனை போலவும், அணுகுண்டுகளை தாங்கியும் அசராமல் நின்ற ஜப்பான் ராணுவம் போலும் இனி வரலாறு திரிக்கபடலாம்
அப்படித்தான் எங்கள் வீரம் தெரியுமா? வரலாறு தெரியுமா என பொங்கிகொண்டிருக்கின்றார்கள்
என்ன வரலாறு? காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யபட்ட வரலாறுதானே அது யாருக்கு தெரியாது?
அந்த தடையினை நீக்கியபின் செய்த சரித்திர சாதனை என்ன? பாபர் மசூதியினை இடித்தது.
இது தவிர உருப்படியாக என்ன செய்தார்கள்?
அவ்வளவு வீரமும் , தீரமும் கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஏன் பாகிஸ்தான் பிரியும் பொழுது ஓடி சென்று ஆக்கிரமித்து ஒரே இந்தியா ஆக்கவில்லை?
பாகிஸ்தானுக்குத்தான் செல்லவில்லை, காஷ்மீருக்குள்ளாவது சென்றால் என்ன?
இது பற்றி எல்லாம் கேட்டால் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லிகொண்டிருப்பார்கள்.
மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கவல்லது ஆர்.எஸ்.எஸ்: மோகன் பகவத்
அரை டவுசரும், ஒரு கம்பும் கொஞ்சம் முன்னேறி கொக்கு சுடும் துப்பாக்கியும் வைத்துகொண்டால் அது ராணுவமாம்.
அப்படியானால் இந்த அத்வானி, மோடிக்கு எல்லாம் இருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பினை நீக்கி இவர்களை அமர்த்திவிடலாமா?
காஷ்மீர் சீன எல்லை எல்லாம் இவர்களை நிறுத்திவிடலாமா?
பின் எதற்கு ராணுவம் அதற்கொரு பட்ஜெட்..
மும்பை தாக்குதல் நடந்தபொழுதெல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ் ராணுவம் என்ன செய்தது?
ஒன்று செய்யலாம், சீனாவுடன் யுத்த அறிவிப்பினை செய்துவிட்டு இவரை ஆர்.எஸ்.எஸ்கார ராணுவத்தை திரட்டி போரிடுங்கள் என சொல்லிவிடலாம்
அதன்பின் நாடு எவ்வளவு அமைதியாக வளமாக இருக்கும் தெரியுமா?